Search This Blog

Sunday, 27 March 2011

தமிழ்நாட்டின் தேர்தல்

ஒவ்வொருவரும் கூட்டணி சேர்ந்து தேர்தல் பிரச்சாரத்திற்காக பயணம் செய்து, தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி கொடுத்து கொண்டிருக்கும் இந்த வேளையில், நாம் தேவனுக்கு சித்தமானவர்கள் ஆட்சிககு வரும்படி ஜெபிப்போம்.

நம்முடைய ஜெபம் மிகவும் முக்கியமானது. நம் ஜெபமே நம் தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். தேர்தல் வாக்குறுதிகளோ, தேர்தல் பிரச்சாரமோ அல்ல, நம்முடைய ஜெபமே யார் பதவியில் அமரப்போகிறார்கள் என்பதை நிச்சயிக்கும். தேர்தலுக்காக எல்லா சபையினரும் ஜெபிக்க ஆரம்பித்த விட்ட நிலையில் நாமும் தொடர்நது ஒவ்வொரு நாளும் நம்முடைய தமிழகத்தின் தேர்தலுக்காக ஜெபிப்பது மிகவும் முக்கியம்.


1. சுவிசேஷத்திற்கு தடை செய்யாத, மதமாற்ற சட்டம் கொண்டு வராத ஒரு கட்சி ஆட்சிக்கு வரும்படியாக ஜெபிப்போம்.


2. இராஜாக்களை தள்ளி இராஜாக்களை ஏற்படுத்தும் ஆண்டவர், தமக்கு சித்தமானவரை நம் முதலமைச்சராக தெரிந்தெடுக்க ஜெபிப்போம்.


3. எந்த இடத்திலும் தேர்தல் நேரத்தில் கள்ள ஓட்டுகளோ, குண்டர்களின் பயமோ, மிரட்டுதலோ இல்லாதபடி மக்கள் சுயாதீனமாக ஓட்டு போட ஜெபிப்போம்.


4. போடப்பட்ட ஓட்டுகள் ஒழுங்காக எண்ணப்படவும், எந்த தில்லுமுல்லுவும் இல்லாதபடி எண்ணப்படதக்கதாக ஜெபிப்போம்.


5. மக்கள் எந்தவித தடையுமில்லாமல், தங்களுக்கு பிடித்தவர்களையும், ஆட்சியை ஒழுங்காய் செய்து, மக்களுக்கு நன்மை கொடுக்கும் கட்சிக்கு ஓட்டு போடவும் ஜெபிப்போம்.

No comments:

Post a Comment