Search This Blog

Monday, 28 March 2011

இந்தியா

இந்த நாளிலும், நம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தாலுக்காக்களிலும் செயல்பட்டு வரும் அரசுத்துறை அலுவலர்களுக்காகள மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள், உதவியாளர்களுக்காக ஜெபிப்போம்.


1. ஓவ்வொரு துறையை சேர்ந்தவர்களும் தங்கள் வேலைகளில் உண்மையாக இருக்க ஜெபிப்போம்.


2. இலஞ்சத்திற்கோ, பதவிக்கோ ஆசைப்பட்டு தங்கள் வேலைகளை செய்யாதபடி, நீதியோடும் நேர்மையோடும் தங்கள் வேலைகளை செய்யவும், தங்களிடத்தில் தேவைக்காக வந்து உதவி செய்ய கோரும் ஏழை எளியவர்களுக்கு தங்கள் உதவி கரத்தை நீட்டத்தக்கதாகவும் ஜெபிப்போம்.


3. வளர்ச்சி பணிகளில் அதிகாரிகள் தங்கள் முழு கவனத்தையும் செலுத்தவும், நல திட்டங்களை ஏழை எளியவர்களும் பெற்று கொள்ளும்படியாக செயல்படுத்தவும் ஜெபிப்போம்.


4. தங்களுக்கு கொடுக்கப்படும் வேலைகளில் திறமையாக செய்யவும், பேருக்கு செய்கிறவர்களாக, மாசமானால் சம்பளம் வந்து விடும், ஆகவே நான் உழைத்தால் என்ன, உழைக்காவிட்டால் என்ன என்ற எண்ணத்தோடு இல்லாமல், உண்மையாக உழைக்கவும், தங்கள் வேலையிடங்களுக்கு பெருமை கொண்டு சேர்க்கிறவர்களாக மாறவும் ஜெபிப்போம்.

No comments:

Post a Comment