Search This Blog

Tuesday, 29 March 2011

திருச்சபை

இந்த நாளில் தேவன் எழுப்பி தந்துள்ள எல்லா திருச்சபைகளுக்காகவும் தேவனை துதிப்போம், ஜெபிப்போம்.


1. தேவன் நாம் ஆராதிக்கும்படியாக நமக்கென்று கொடுத்திருக்கிற ஒவ்வொரு சபைக்காகவும் தேவனை ஸ்தோத்தரிப்போம்.


2. சபைகளில் தேவன் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்து தம்முடைய வார்த்தையை தம்முடைய ஊழியக்காரர் மூலம் உறுதிப்படுத்த ஜெபிப்போம்.


3. சபைகள் இல்லாத இடங்களில் தேவன் சபைகளை எழுப்பித்தர ஜெபிப்போம்.

4. சபைகளை நடத்துகிற போதகர்கள், மேய்ப்பர்கள், மூப்பர்கள் பாவத்தில் விழாமல், உண்மையோடும், சத்தியத்தை சத்தியமாக போதிக்கவும், கர்த்தருடைய வார்த்தையை எந்தவித கலப்பும் இல்லாமல், கள்ள போதகங்களை செய்யாமல், கர்த்தருடைய வார்த்தையை உண்மையாய் போதிக்கும்படி ஜெபிப்போம்.


5. சபைக்கு வருகிற ஆத்துமாக்கள் சத்தியத்தை கேட்டு, அதை விசுவாசித்து இரட்சிப்படையவும், தேவ நாம மகிமைக்கென்று அநேக ஆத்துமாக்களை தேவ சபையில் கொண்டு சேர்க்கவும் ஜெபிப்போம்.

No comments:

Post a Comment