Search This Blog

Thursday, 31 March 2011

கண்ணீரோடு வாழ்கிற மக்களுக்காக

இந்த நாளில் சரீரத்திலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டு, கண்ணீரோடு வாழ்கிற மக்களுக்காக ஜெபிப்போம்.


1. விதவைகளுக்காக, தகப்பனை இழந்து தவிக்கிற ஒவ்வொரு பிள்ளைகளுக்காக, கணவனை இழந்து சம்பாதிக்க வழி தெரியாமல் தவிக்கிற ஒவ்வொரு விதவைகளுக்காக, இளவயதில் கணவரை இழந்து தனித்துவிடப்பட்ட ஒவ்வொரு விதவைகளுக்காக ஜெபிப்போம்.


2. அனாதைகளுக்காக, தங்களை அரவணைப்பாரில்லாமல், நேசிக்க யாருமில்லாமல், அனாதை இல்லங்களில் வாழ்ந்து வருகிற அனாதை பிள்ளைகளுக்காக ஜெபிப்போம்.


3. ஊனமுற்றவர்களுக்காக, ஒரு வேளை உணவில்லாமல் வறுமையில் வாடுபவர்களுக்காக ஜெபிப்போம்.


4. மனநிலை பாதிக்கப்பட்டு துன்பப்படுகிறவர்களுக்காக, தீராத வியாதிகளால் பாதிக்கப்பட்டு வருத்தப்பட்டு கொண்டு இருப்பவர்களுக்காக ஜெபிப்போம்.


5. ஆஸ்பத்திரியில் மரண வேதனையில் துடிப்பவர்களுக்காக, கேன்சர் வியாதியில் நாட்களை எண்ணி கொண்டு இருப்பவர்களுக்காக, வியாதியின் கொடூர பிடியில் சிக்கி வேதனையோடு நாட்களை கடத்தி கொண்டு இருப்பவர்களுக்காக தேவன் அவர்கள் வேதனைகளை நீக்கி சுகம் தரத்தக்கதாக ஜெபிப்போம்.

No comments:

Post a Comment