Search This Blog

Tuesday, 6 May 2014

துதியுங்கள் நம் தேவனை

துதியுங்கள் நம் தேவனை
போற்றுங்கள் நம் இராஜனை
வாழ்த்துங்கள் நம் கர்த்தனை
போற்றுவோம் வாழ்த்துவோம்
இன்றும் என்றென்றுமாய்

ஆஆஆ அல்லேலூயா ஓஓஓ ஓசன்னா (4)

1. அதிசயம் செய்யும் தேவன் பெரியவர்
நாம் ஆராதிக்கும் தேவன் என்றும் சிறந்தவர்
நமக்காய் யாவும் செய்து முடித்தார்
நன்றியோடு ஆராதிப்போம்

2. நம் பாவம் போக்கும் ஜீவ தேவன் நல்லவர்
நம் பாவம் போக்கும் வல்ல தேவன் சிறந்தவர்
கண்னீர் கவலை வியாதி யாவும் மாற்றுவார்
கரங்களை தட்டி ஆர்ப்பரிப்போம்

3. நமக்காய் இரத்தம் சிந்தி மரித்தார்
மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்
நேற்றும் இன்றும் மாறிடா நம் இயேசுவை
கைகள் உயர்த்தி ஆராதிப்போம்

No comments:

Post a Comment