Search This Blog

Monday, 5 May 2014

கடும் புயலிலே என்னைக் காத்தவரே

1. கடும் புயலிலே என்னைக் காத்தவரே
கண்ணின் மணிபோல காப்பவரே
தினம்தோறும் உம் கிருபையினால்
வழி நடத்திடுமே

என் அன்பு நேசரே என் ஆருயிர் நண்பனே
வாழ்த்துவேன் வணங்குவேன் உம்மையே
என் வாழ்நாளெல்லாம் உமக்காய் ஜீவிப்பேன்
என் உயிருள்ள நாள்வரை உம்மைப் போற்றிடுவேன்

2. இந்த நாளின் ஒவ்வொரு செயலிலும்
உம் ஞானத்தால் என்னை நடத்துமே
நான் நடக்கும் வழிதனை காண்பித்து
ஆலோசனை சொல்லுமேன் --- என் அன்பு

3. பழைய நினைவுகள் கசந்த நிகழ்ச்சிகள்
துயரமான பல தோல்விகள்
என்னை வாட்டுகின்ற வேளையில்
உம் சமூகத்தை நான் சாருவேன் --- என் அன்பு

4. உடைந்த உறவுகள் மனதின் கசப்புகள்
என்னை நொறுக்கும் இதயத்தின் ஏக்கங்கள்
இருளாய் என்னை சூழ்கையில்
உம் பிரசன்னம் தான் என் அடைக்கலம் --- என் அன்பு

No comments:

Post a Comment