Search This Blog

Monday, 5 May 2014

நீதி கொன்ற நீதிபதி


லூக்கா 23 : 20-25        
                                                                                      
“இயேசுவையோ, அவர்கள் இஷ்டத்துக்கு ஒப்புக் கொடுத்தான்!” - லூக்கா 23 : 25

குற்றத்தின் தன்மையை விசாரித்தறிய, நீதிபதிகள் சில சமயம் கைதியைக் காவலர்கள் வசம் ஒப்படைப்பர். அப்போது, காவல் துறை உண்மையை வரவழைக்கக் கைதியை விசாரிக்கும்போது, கொடுமை தாங்காமல் கைதி இறந்து விடுவதும் உண்டு. இயேசுவைப் பிலாத்துவிடம் பிரதான ஆசாரியனும் யூத மக்களும் ஒப்புக் கொடுத்தபோது, அவருக்கும் கொடுமைகள் நடந்தன.

இயேசுவின் வல்லமையான செயல்கள் பற்றிக் கேள்வியுற்ற பிலாத்து, அவரை நேரில் காணவிரும்பியிருப்பார். தேசாதிபதியானதால் வாய்ப்புக் கிடைத்திருக்காது. இப்போதோ, அவர் தன் முன்னாலேயே நிற்கிறார். தன் கேள்விகளுக்கு அவரளித்த விடைகளால் கவரப்பட்ட பிலாத்து, எப்படியேனும் அவரை விடுதலை செய்ய விரும்பினார். ஆனால், தன்னை `ராஜா’ என்று சொன்ன இயேசுவை நீர் விடுதலை செய்தால், நீரும் இராயனுக்கு விரோதிதான் என்ற யூதருக்குப் பயந்து தான் பிலாத்து இயேசுவுக்குக் கொலைத்தீர்ப்பளித்தான். நீதிபதியின் வாயாலேயே நிரபராதி என அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு, அந்த நீதிபதியே மரண தண்டனை விதித்த கொடுமையை உலகத்திலேயே பிலாத்து ஒருவன்தான் செய்தான். காரணம் பிலாத்துவிடமிருந்த பதவி மோகம். இதனால் இயேசுவுக்கு அநீதியான தீர்ப்பு வழங்கி, யூதருடைய இஷ்டத்துக்கு அவரை ஒப்புக் கொடுக்கும்படிச் செய்தது. பிலாத்து ஒரு தேசாதிபதியாகவும், நீதிபதியாகவும் இருந்தும், தன் பதவியைக் காத்துக் கொள்ளுவதற்காக, அநீதியான தீர்ப்பை இயேசுவுக்கு வழங்கினான்.

விளைவு என்ன தெரியுமா? பிலாத்து தன் சொந்த நாட்டாராலேயே விரட்டப்பட்டுத் தற்கொலை செய்து கொண்டான். அவனது பிணம் மலைமேலிருந்த ஒரு குளத்தில்வீசியெறியப்பட்டது என்றும் வரலாறு கூறுகிறது. நாம் சுய நலத்துக்காகவும், நமது தலைமைத்துவத்தைத் தக்கவைத்துக் கொள்ளுவதற்காகவும் அநீதியான வழிகளில் சென்று நாட்டையும் திருச்சபையையும் நாசமாக்கிக் கொண்டிருக்கிறோம். நாம் நிர்மூலமாகாதபடிக்கு, நம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டு, நமது அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட்ட இயேசுவின் இரத்தம் நம்மைக் கழுவட்டும். நம்மை அவரிடம் ஒப்புக் கொடுப்போம்.

என்னை மீட்ட இயேசுவே, `என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். ஆமேன்.

No comments:

Post a Comment