பாகம் - 1
இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனதை; தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான். - (மாற்கு 1:41-41).
இயேசுகிறிஸ்து செய்த அதிசயமான அற்புதங்களில் குஷ்டரோகியை சொஸ்தமாக்கியது ஒன்றாகும். நாம் சொல்லும்போது இயேசுகிறிஸ்து குஷ்டரோகியை சுத்தமாக்கினார் என்று வெகு எளிதாக சொல்லி விடுகிறோம், பாடி விடுகிறோம். ஆனால் குஷ்டரோகம் என்ற வியாதியை குறித்து நம்மில் அநேகர் அதிகமாக அறிந்ததில்லை. என்னுடைய சிறுவயதில் எங்கள் வீட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களில் நாங்கள் மாத்திரமே கிறிஸ்தவர்கள். எங்கள் வீட்டுக்கு குஷ்டரோகம் பிடித்து, சுகமான ஒரு சகோதரன் வருவார். அவருடைய வீட்டிலேயே அவரை உள்ளே சேர்த்து கொள்ள மாட்டார்கள். எங்கள் தெருவில் ஒருவரும் அவரை வீட்டிற்கு அழைக்க மாட்டார்கள், சேர்த்து கொள்ள மாட்டார்கள். ஆனால் அவர் எங்கள் வீட்டிற்கு வருவார். நாங்கள் குடிக்கும் டம்ளரிலே காப்பி குடிப்பார். நாங்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதால் இது எனக்கு கிடைத்த பாக்கியம் என்று அவர் கூறுவார். மிகவும் தனிமைப்படுத்தப்பட்டவராக அவர் வாழ்ந்தார். இந்நாட்களிலும் அந்த நோய் அத்தனை பயங்கரமானது, வேதனைக்குரியது.
வேதத்தில் நாம் இரண்டு இடங்களில் குஷ்டரோகிகள் சுகமானதை குறித்து வாசிக்கிறோம். முதலாவது மாற்கு 1:40-45 வரை காணப்படுகிற குஷ்டரோகியும், பின்னர் லூக்கா 17:12-19 வரையுள்ள வசனங்களில் பத்து குஷ்டரோகிகள் சுகமானதை குறித்தும் வாசிக்கிறோம். இந்த குஷ்டரோகி சுகமானதை குறித்து வாசிக்கும்போது, கிறிஸ்துவின் அன்பும், அவருடைய மனதுருக்கமும், அவருடைய தொடுதலினால் உண்டாகும் மாற்றத்தையும் காண்கிறோம்.
குஷ்டரோகம் என்பது வேதாகம காலங்களில் சுகமாக்க முடியாத ஒரு வியாதியாகும். அதுவும் மறற்வர்களை மிகவும் தொற்றி கொள்ளக்கூடிய வியாதியாகும். இந்நாட்களில் அதற்கு மருந்து கண்டுபிடித்ததால் அதை சரிசெய்ய முடியும். வேதாகம காலங்களில் தொழுநோயை போல மோசமான வியாதி வேறு எதுவும் இருந்ததில்லை. அது முழு சரீரத்தையும் ஆட்கொண்டு, மனிதனை செயலிழக்க செய்யும் ஒரு வியாதியாகும். இந்த நோய் உண்டானால் பெரிய பெரிய சீழ் நிறைந்த கொப்புளங்கள் உண்டாகி முகம் விகாரமாக மாறி, ஒரு சிங்கத்தை போல தோற்றமளிக்கும். இந்த வியாதி ஒன்பது வருடங்கள் ஒரு மனிதனை சீரழித்து கடைசியில் அவன் உயிரையே குடித்து விடும். அவனது புண்ணிலிருந்து வரும் சீழ் கட்டப்படாமல், அது சரியாக பராமரிக்கப்படாததால், அதனுள் கிருமிகள் ஏற்பட்டு, அதனால், அவன் உயிரே எடுத்து விடும்.
வேதாகம காலங்களில் ஒரு முறை ஒரு மனிதனுக்கு தொழு நோய் இருக்கிறதென்று கண்டுபிடிக்கப்பட்டால் அவன் அந்த கிராமத்திலிருந்தே அப்படிப்பட்டவர்களுக்கென்று குறிக்கப்பட்ட இடத்திற்கு சென்று விட வேண்டும். தன்னுடைய உறவினர், மனைவி, பிள்ளைகள் யாரையும் அவன் தொட முடியாது. வெகு தூரத்தில் இருந்து தான் பார்க்க முடியும். ஒரு சுத்தமான மனிதனுக்கும் அவனுக்கும் இடையில் குறைந்தது 50 அடியாவது தூரம் இருக்க வேண்டும். அவன் பேசும்போது ஒரு துணியை அவன் வாயில் வைத்தவனாக பேச வேண்டும். யாராவது அருகில் வரும்போது தீட்டு, தீட்டு என்று சத்தமிட வேண்டும். அவனது துணியை கிழித்து கொள்ள வேண்டும். அதன் மூலம் மற்றவர்கள் அவன் தொழு நோயாளி என்று அறிந்து கொள்வார்கள். இந்த நோய் அவனது நரம்பு மண்டலத்தை தொடுவதால், அவனுக்கு எந்த உணர்ச்சியும் தெரியாது. சூடாக தொட்டாலோ, நெருப்பை தொட்டாலோ அவனுக்கு உணர்ச்சி இல்லாததால் அவனுக்கு காயம் உண்டான பின்னாலேதான் அவனுக்கு தெரியும் நெருப்பை தொட்டிருக்கிறோம் என்று.
இப்படிப்பட்ட தொழுநோய் பிடித்த மனிதன் இயேசுவை நோக்கி வருகிறான். இயேசுவை சுற்றி எப்பொழுதும் கூட்டம் இருந்து கொண்டுதான் இருந்தாலும், அவன் தைரியமாக கர்த்தரை நோக்கி முன்னேறுகிறான். தான் சுத்தமாக வேண்டும் என்பதே அவனுடைய ஒரே நோக்கமாக இருந்தது. கர்த்தரால் மாத்திரமே சுத்தமாக்க முடியும் என்ற அசைக்க முடியாத விசுவாசமும் அவனுக்கு இருந்தது. நினைத்து பாருங்கள், அப்படிப்பட்ட வியாதியுடைய ஒருவன் கூட்டத்தில் நுழைந்து தீட்டு தீட்டு என்று கத்தி கொண்டு வரும்போது, அச்சத்தில் மக்கள் அலறி அடித்து விலகியிருப்பார்கள். எங்களுக்கு அந்த நோய் வந்து விட போகிறது என்று பயந்து ஓடியிருப்பார்கள். அந்த தொழுநோயாளி நினைத்திருப்பான், எனக்கு ஒன்று சுகம் வேண்டும், அல்லது இந்த மக்களே என்னை கல் எறிந்து கொன்று போடட்டும் என்று!
ஆகவே அதை குறித்தெல்லாம் கவலைப்படாமல், அந்த மனிதன் கிறிஸ்துவின் முன்னால் வந்து முழங்காற்படியிட்டு, உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான். பாருங்கள், அவனுக்கு தெரியும் கர்த்தரால் அவனை சுத்தமாக்க முடியும் என்று, ஆனால் அவருக்கு சித்தமுண்டா என்பதே அவனுடைய கேள்வியாயிருந்தது. இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். குஷ்டரோகியை தொடுவது சட்டப்படி தவறு என்றாலும், இயேசு அவனை தொட்டார். அந்த கூட்டம் எல்லாம் பயந்து அவன் நம்மை தொட்டு விடப்போகிறான் என்று ஓடும்போது, மேசியாவாகிய இயேசு அவனை தொட்டார். அவரை எந்த நோயும் தொட முடியாது, அவருக்குள்ளிருந்த பரிசுத்தம், சுத்தம் அவனது நோயை குணமாக்கியது. அல்லேலூயா! (இந்த கட்டுரை நாளையும் தொடரும்)
செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
பெருங்கோட்டை ஒன்று தரை மட்டமானது
அவர் சொல்ல குருடரின் கண் திறந்தது
அவர் தொட குஷ்டரோகி சொஸ்தமாயினான்
..
ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
என் உள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என்தன் துணை அவரே
என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நீரே எங்கள் யெகோவா ராப்பாவாக இருப்பதற்காக உம்மை துதிக்கிறோம். அந்த நாளில் இயேசுகிறிஸ்து தம்மண்டை வந்த குஷ்டரோகியை முகம் சுளிக்காமல், மனதுருக்கத்தோடு தொட்டு சுகப்படுத்திய அற்புதத்தை நினைத்து உம்மை துதிக்கிறோம் தகப்பனே. உம்மண்டை வந்த ஒருவரையும் புறம்பே தள்ளாத நேசர், பாவ தொழுநோயால் வாடும் ஒவ்வொருவரையும் கூட தொட்டு சுகப்படுத்துவீராக. பாவ நோயிலிருந்து விடுதலை தருவீராக. மனிதனால் சுகப்படுத்த முடியாத எந்த வியாதியை சுகமாக்க வல்லவராகிய நீர் இந்த வேளையில் வியாதியினால் பாடுகள் பட்டு கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் விசுவாசத்தோடு உம்மண்டை வரும்போது அவர்களை தொட்டு குணமாக்கும்படி ஜெபிக்கிறோம். சுகத்தை தருவீராக. உமக்கு சாட்சியாக மாற்றுவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
பாகம் - 2
இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான். - (மாற்கு 1:41-41).
குஷ்டரோகியான ஒருவன்; கிறிஸ்துவின் முன்னால் வந்து முழங்காற்படியிட்டு, உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டபோது, சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட அவனை கர்த்தர் தொட்டு சுகப்படுத்தியதை குறித்து பார்த்தோம். தொடர்ந்து இரட்சகர் அவனை தொட்டதால் அவனில் ஏற்பட்ட மாற்றத்தை குறித்து பார்ப்போம்.
'இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான்'. அல்லேலூயா! நம் தேவனால் சுகமாக்க முடியாத வியாதி ஒன்றுமே இல்லை. அவர் தொடுதல் அத்தனை வல்லமையுள்ளது. இயேசுகிறிஸ்துவிடம் வந்த எவரும் ஒரு போதும் வந்த வண்ணமாகவே திரும்பி செல்ல முடியாது.
இயேசுகிறிஸ்து தொட்ட மாத்திரத்தில் அழுகி நாற்றம் எடுத்து கொண்டிருந்த அவனது தோலும் புண்களும் புது மாற்றத்தை பெற ஆரம்பித்தது. அவனது தோல் சிறு பிள்ளையின் தோல் போல ஒரு சேதமும் இல்லாமல் மாசற்றதாக மாறினது.
பிரியமானவர்களே, ஒரு வேளை நமக்கு தொழு நோய் இல்லை என்று சொல்லலாம், ஆனால் பாவம் ஒரு தொழுநோயை போல கர்த்தரிடமிருந்து நம்மை பிரித்து, அசுத்தமாக இருப்பதால், நான் கர்த்தரிடம் வருவதற்கு தகுதியில்லாதவன், அல்லது இல்லாதவள் என்று நம்மை நாமே கர்த்தரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? தம்மிடத்தில் வந்த ஒருவரையும் புறம்பே தள்ளாத நேசர் மனதுருக்கம் உள்ளவராய், எனக்கு சித்தமுண்டு சுத்தமாகு என்று நம் பாவ நோயை தொட்டு சுகப்படுத்துவார். அவர் தொடும்போது நாற்றம் எடுத்தது போன்ற நமது பாவ வாழ்க்கை புதியதாக மாறிவிடும். 'இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின' - (2கொரிந்தியர் 5:17) என்ற வசனத்தின்படி புது சிருஷ்டியாய் மாறிவிடுவோம். பழைய நாற்றமெடுத்த வாழ்க்கை மாறி, எல்லாமே புதிதாக மாறிவிடும். அல்லேலூயா!
கிறிஸ்துவால் மன்னிக்க முடியாத பாவம் எதுவுமே இல்லை. அவருடைய இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் வல்லமையுள்ளது. ஆமென். அவர் சுத்தமாக்கியதை யாராலும் அசுத்தம் என்று தள்ளிவிட முடியாது. பாவத்திலிருந்து விடுதலை தரும் ஒரே தெய்வம் இயேசுகிறிஸ்து மாத்திரமே! அவரிடத்தில் விசுவாசத்தோடு வந்து, 'ஐயா என்னை சுத்தப்படுத்தும்' என்று கேட்கும்போது, நிச்சயமாகவே தமது இரத்தத்தால் நம்மை கழுவி, நம்மை சுத்தப்படுத்தி, நித்திய ஜீவனை நமக்கு கொடுத்து, நம்மை பரலோக ராஜ்யத்திற்கு தகுதியாக்குவார். ஆமென் அல்லேலூயா!
'அப்பொழுது அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; ஆயினும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டிருக்கிறவைகளை அவர்களுக்குச் சாட்சியாகச் செலுத்து என்று கண்டிப்பாய்ச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார்'. அவர் ஏன் அவனை உடனே அனுப்பிவிட்டார் என்றால், இந்த அற்புதத்தை காணும் மக்கள், அவரை அற்புதம் செய்கிறவராகவே பார்ப்பார்களே ஒழிய இராஜ்யத்தின் சுவிசேஷத்தை கேட்கிறவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதே. அவர் எங்கு சென்றாலும் அவரை சுகமளிக்கிறவராக காண்பார்களே ஒழிய, அவர் இந்த உலகத்திற்கு வந்த நோக்கத்தை உணர மாட்டார்கள். இந்த நாளின் சுவிசேஷகருக்கும் அவருக்கும் தான் எத்தனை வித்தியாசம்! இந்த நாட்களில் ஏதோ ஒரு அற்புதம் நடந்து விட்டால்தான் எத்தனை எத்தனை பிரசித்தப்படுத்துதல், விளம்பரங்கள்!! ஒவ்வொரு முறையும் அதை கூட்டத்தில் சொல்லி, தங்களை உயர்த்தி காண்பிக்கும் தன்மைகள்!!
அந்த மனிதனிடம் கர்த்தர் வெளியே சொல்ல வேண்டாம் என்றாலும் அவன் கேட்காமல், 'அவனோ புறப்பட்டுப் போய், இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான்' என்று பார்க்கிறோம். ஆம், கர்த்தர் ஒருவனுடைய வாழ்வை தொடும்போதுதான் அது எத்தனை எத்தனை சந்தோஷத்தை அவன் வாழ்வில் கொண்டு வருகிறது! அவனால் சும்மா இருக்க முடியாது. என் தேவன் எனக்கு செய்த அற்புதத்தை பாருங்கள் என்று அவன் துள்ளி குதித்து, கர்த்தரை பிரசித்தம் செய்கிறவனாக மாறி விடுவான். முதலில் தீட்டு தீட்டு என்று கதறினவன், இப்போது நான் சுத்தமானேன், சுத்தமானேன் என்று சந்தோஷமாய் கூற தொடங்கி விடுவான். அல்லேலூயா!
இது போன்ற புதிதாக்கப்பட்ட, நம் வாழ்க்கையை மாற்றிவிடும் கிறிஸ்துவின் மனதுருக்கமான தொடுதலுக்கு நம்மை அர்ப்பணிப்போமா? அந்த குஷ்டரோகி எத்தனை அசுத்தமானவனாக இருந்திருந்தாலும் அவன் வாழ்க்கையில் ஒரு அற்புதமான புது மாற்றம் ஏற்பட்டது போல கர்த்தரிடம் வரும் ஒவ்வொரு பாவியின் வாழ்விலும், அது எப்பேற்பட்ட அசுத்தமாய் இருந்தாலும் கர்த்தர் தமது பரிசுத்த வல்லமையுள்ள இரத்தத்தால் கழுவி நம்மை சுத்திகரித்து, நம்மை புதியவர்களாக மாற்றி விடுகிறார். நம்மை அதற்கு அர்ப்பணிப்போமா? ஆமென் அல்லேலூயா!
தொடும் என் கண்களையே
உம்மை நான் காண வேண்டுமே
இயேசுவே உம்மையே நான்
காண வேண்டுமே
..
தொடும் என் ஆண்டவரே
தொடும் என் வாழ்வினையே
இயேசுவே உம்மை போல்
என்னை மாற்றுமே
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த வேளையிலும் யார் யார் தங்களை கிறிஸ்து சுத்தமாக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அவர்களது பாவ கறைகளை இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவி சுத்திகரிப்பீராக. அந்த குஷ்டரோகியை கண்டு மனதுருகி, எனக்கு சித்தமுண்டு, சுத்தமாகு என்று அவனை தொட்டு சுகப்படுத்தின தேவன், இன்றும் மாறாதவராக அவரண்டை வருகிறவர்களை புறம்பே தள்ளாதவராக, ஏற்று கொள்வதற்காக உமக்கு நன்றி. தொடர்ந்து பரிசுத்தமாய் வாழ கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
இயேசுகிறிஸ்து செய்த அதிசயமான அற்புதங்களில் குஷ்டரோகியை சொஸ்தமாக்கியது ஒன்றாகும். நாம் சொல்லும்போது இயேசுகிறிஸ்து குஷ்டரோகியை சுத்தமாக்கினார் என்று வெகு எளிதாக சொல்லி விடுகிறோம், பாடி விடுகிறோம். ஆனால் குஷ்டரோகம் என்ற வியாதியை குறித்து நம்மில் அநேகர் அதிகமாக அறிந்ததில்லை. என்னுடைய சிறுவயதில் எங்கள் வீட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களில் நாங்கள் மாத்திரமே கிறிஸ்தவர்கள். எங்கள் வீட்டுக்கு குஷ்டரோகம் பிடித்து, சுகமான ஒரு சகோதரன் வருவார். அவருடைய வீட்டிலேயே அவரை உள்ளே சேர்த்து கொள்ள மாட்டார்கள். எங்கள் தெருவில் ஒருவரும் அவரை வீட்டிற்கு அழைக்க மாட்டார்கள், சேர்த்து கொள்ள மாட்டார்கள். ஆனால் அவர் எங்கள் வீட்டிற்கு வருவார். நாங்கள் குடிக்கும் டம்ளரிலே காப்பி குடிப்பார். நாங்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதால் இது எனக்கு கிடைத்த பாக்கியம் என்று அவர் கூறுவார். மிகவும் தனிமைப்படுத்தப்பட்டவராக அவர் வாழ்ந்தார். இந்நாட்களிலும் அந்த நோய் அத்தனை பயங்கரமானது, வேதனைக்குரியது.
வேதத்தில் நாம் இரண்டு இடங்களில் குஷ்டரோகிகள் சுகமானதை குறித்து வாசிக்கிறோம். முதலாவது மாற்கு 1:40-45 வரை காணப்படுகிற குஷ்டரோகியும், பின்னர் லூக்கா 17:12-19 வரையுள்ள வசனங்களில் பத்து குஷ்டரோகிகள் சுகமானதை குறித்தும் வாசிக்கிறோம். இந்த குஷ்டரோகி சுகமானதை குறித்து வாசிக்கும்போது, கிறிஸ்துவின் அன்பும், அவருடைய மனதுருக்கமும், அவருடைய தொடுதலினால் உண்டாகும் மாற்றத்தையும் காண்கிறோம்.
குஷ்டரோகம் என்பது வேதாகம காலங்களில் சுகமாக்க முடியாத ஒரு வியாதியாகும். அதுவும் மறற்வர்களை மிகவும் தொற்றி கொள்ளக்கூடிய வியாதியாகும். இந்நாட்களில் அதற்கு மருந்து கண்டுபிடித்ததால் அதை சரிசெய்ய முடியும். வேதாகம காலங்களில் தொழுநோயை போல மோசமான வியாதி வேறு எதுவும் இருந்ததில்லை. அது முழு சரீரத்தையும் ஆட்கொண்டு, மனிதனை செயலிழக்க செய்யும் ஒரு வியாதியாகும். இந்த நோய் உண்டானால் பெரிய பெரிய சீழ் நிறைந்த கொப்புளங்கள் உண்டாகி முகம் விகாரமாக மாறி, ஒரு சிங்கத்தை போல தோற்றமளிக்கும். இந்த வியாதி ஒன்பது வருடங்கள் ஒரு மனிதனை சீரழித்து கடைசியில் அவன் உயிரையே குடித்து விடும். அவனது புண்ணிலிருந்து வரும் சீழ் கட்டப்படாமல், அது சரியாக பராமரிக்கப்படாததால், அதனுள் கிருமிகள் ஏற்பட்டு, அதனால், அவன் உயிரே எடுத்து விடும்.
வேதாகம காலங்களில் ஒரு முறை ஒரு மனிதனுக்கு தொழு நோய் இருக்கிறதென்று கண்டுபிடிக்கப்பட்டால் அவன் அந்த கிராமத்திலிருந்தே அப்படிப்பட்டவர்களுக்கென்று குறிக்கப்பட்ட இடத்திற்கு சென்று விட வேண்டும். தன்னுடைய உறவினர், மனைவி, பிள்ளைகள் யாரையும் அவன் தொட முடியாது. வெகு தூரத்தில் இருந்து தான் பார்க்க முடியும். ஒரு சுத்தமான மனிதனுக்கும் அவனுக்கும் இடையில் குறைந்தது 50 அடியாவது தூரம் இருக்க வேண்டும். அவன் பேசும்போது ஒரு துணியை அவன் வாயில் வைத்தவனாக பேச வேண்டும். யாராவது அருகில் வரும்போது தீட்டு, தீட்டு என்று சத்தமிட வேண்டும். அவனது துணியை கிழித்து கொள்ள வேண்டும். அதன் மூலம் மற்றவர்கள் அவன் தொழு நோயாளி என்று அறிந்து கொள்வார்கள். இந்த நோய் அவனது நரம்பு மண்டலத்தை தொடுவதால், அவனுக்கு எந்த உணர்ச்சியும் தெரியாது. சூடாக தொட்டாலோ, நெருப்பை தொட்டாலோ அவனுக்கு உணர்ச்சி இல்லாததால் அவனுக்கு காயம் உண்டான பின்னாலேதான் அவனுக்கு தெரியும் நெருப்பை தொட்டிருக்கிறோம் என்று.
இப்படிப்பட்ட தொழுநோய் பிடித்த மனிதன் இயேசுவை நோக்கி வருகிறான். இயேசுவை சுற்றி எப்பொழுதும் கூட்டம் இருந்து கொண்டுதான் இருந்தாலும், அவன் தைரியமாக கர்த்தரை நோக்கி முன்னேறுகிறான். தான் சுத்தமாக வேண்டும் என்பதே அவனுடைய ஒரே நோக்கமாக இருந்தது. கர்த்தரால் மாத்திரமே சுத்தமாக்க முடியும் என்ற அசைக்க முடியாத விசுவாசமும் அவனுக்கு இருந்தது. நினைத்து பாருங்கள், அப்படிப்பட்ட வியாதியுடைய ஒருவன் கூட்டத்தில் நுழைந்து தீட்டு தீட்டு என்று கத்தி கொண்டு வரும்போது, அச்சத்தில் மக்கள் அலறி அடித்து விலகியிருப்பார்கள். எங்களுக்கு அந்த நோய் வந்து விட போகிறது என்று பயந்து ஓடியிருப்பார்கள். அந்த தொழுநோயாளி நினைத்திருப்பான், எனக்கு ஒன்று சுகம் வேண்டும், அல்லது இந்த மக்களே என்னை கல் எறிந்து கொன்று போடட்டும் என்று!
ஆகவே அதை குறித்தெல்லாம் கவலைப்படாமல், அந்த மனிதன் கிறிஸ்துவின் முன்னால் வந்து முழங்காற்படியிட்டு, உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான். பாருங்கள், அவனுக்கு தெரியும் கர்த்தரால் அவனை சுத்தமாக்க முடியும் என்று, ஆனால் அவருக்கு சித்தமுண்டா என்பதே அவனுடைய கேள்வியாயிருந்தது. இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். குஷ்டரோகியை தொடுவது சட்டப்படி தவறு என்றாலும், இயேசு அவனை தொட்டார். அந்த கூட்டம் எல்லாம் பயந்து அவன் நம்மை தொட்டு விடப்போகிறான் என்று ஓடும்போது, மேசியாவாகிய இயேசு அவனை தொட்டார். அவரை எந்த நோயும் தொட முடியாது, அவருக்குள்ளிருந்த பரிசுத்தம், சுத்தம் அவனது நோயை குணமாக்கியது. அல்லேலூயா! (இந்த கட்டுரை நாளையும் தொடரும்)
செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
பெருங்கோட்டை ஒன்று தரை மட்டமானது
அவர் சொல்ல குருடரின் கண் திறந்தது
அவர் தொட குஷ்டரோகி சொஸ்தமாயினான்
..
ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
என் உள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என்தன் துணை அவரே
என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நீரே எங்கள் யெகோவா ராப்பாவாக இருப்பதற்காக உம்மை துதிக்கிறோம். அந்த நாளில் இயேசுகிறிஸ்து தம்மண்டை வந்த குஷ்டரோகியை முகம் சுளிக்காமல், மனதுருக்கத்தோடு தொட்டு சுகப்படுத்திய அற்புதத்தை நினைத்து உம்மை துதிக்கிறோம் தகப்பனே. உம்மண்டை வந்த ஒருவரையும் புறம்பே தள்ளாத நேசர், பாவ தொழுநோயால் வாடும் ஒவ்வொருவரையும் கூட தொட்டு சுகப்படுத்துவீராக. பாவ நோயிலிருந்து விடுதலை தருவீராக. மனிதனால் சுகப்படுத்த முடியாத எந்த வியாதியை சுகமாக்க வல்லவராகிய நீர் இந்த வேளையில் வியாதியினால் பாடுகள் பட்டு கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் விசுவாசத்தோடு உம்மண்டை வரும்போது அவர்களை தொட்டு குணமாக்கும்படி ஜெபிக்கிறோம். சுகத்தை தருவீராக. உமக்கு சாட்சியாக மாற்றுவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
பாகம் - 2
இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான். - (மாற்கு 1:41-41).
குஷ்டரோகியான ஒருவன்; கிறிஸ்துவின் முன்னால் வந்து முழங்காற்படியிட்டு, உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டபோது, சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட அவனை கர்த்தர் தொட்டு சுகப்படுத்தியதை குறித்து பார்த்தோம். தொடர்ந்து இரட்சகர் அவனை தொட்டதால் அவனில் ஏற்பட்ட மாற்றத்தை குறித்து பார்ப்போம்.
'இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான்'. அல்லேலூயா! நம் தேவனால் சுகமாக்க முடியாத வியாதி ஒன்றுமே இல்லை. அவர் தொடுதல் அத்தனை வல்லமையுள்ளது. இயேசுகிறிஸ்துவிடம் வந்த எவரும் ஒரு போதும் வந்த வண்ணமாகவே திரும்பி செல்ல முடியாது.
இயேசுகிறிஸ்து தொட்ட மாத்திரத்தில் அழுகி நாற்றம் எடுத்து கொண்டிருந்த அவனது தோலும் புண்களும் புது மாற்றத்தை பெற ஆரம்பித்தது. அவனது தோல் சிறு பிள்ளையின் தோல் போல ஒரு சேதமும் இல்லாமல் மாசற்றதாக மாறினது.
பிரியமானவர்களே, ஒரு வேளை நமக்கு தொழு நோய் இல்லை என்று சொல்லலாம், ஆனால் பாவம் ஒரு தொழுநோயை போல கர்த்தரிடமிருந்து நம்மை பிரித்து, அசுத்தமாக இருப்பதால், நான் கர்த்தரிடம் வருவதற்கு தகுதியில்லாதவன், அல்லது இல்லாதவள் என்று நம்மை நாமே கர்த்தரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? தம்மிடத்தில் வந்த ஒருவரையும் புறம்பே தள்ளாத நேசர் மனதுருக்கம் உள்ளவராய், எனக்கு சித்தமுண்டு சுத்தமாகு என்று நம் பாவ நோயை தொட்டு சுகப்படுத்துவார். அவர் தொடும்போது நாற்றம் எடுத்தது போன்ற நமது பாவ வாழ்க்கை புதியதாக மாறிவிடும். 'இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின' - (2கொரிந்தியர் 5:17) என்ற வசனத்தின்படி புது சிருஷ்டியாய் மாறிவிடுவோம். பழைய நாற்றமெடுத்த வாழ்க்கை மாறி, எல்லாமே புதிதாக மாறிவிடும். அல்லேலூயா!
கிறிஸ்துவால் மன்னிக்க முடியாத பாவம் எதுவுமே இல்லை. அவருடைய இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் வல்லமையுள்ளது. ஆமென். அவர் சுத்தமாக்கியதை யாராலும் அசுத்தம் என்று தள்ளிவிட முடியாது. பாவத்திலிருந்து விடுதலை தரும் ஒரே தெய்வம் இயேசுகிறிஸ்து மாத்திரமே! அவரிடத்தில் விசுவாசத்தோடு வந்து, 'ஐயா என்னை சுத்தப்படுத்தும்' என்று கேட்கும்போது, நிச்சயமாகவே தமது இரத்தத்தால் நம்மை கழுவி, நம்மை சுத்தப்படுத்தி, நித்திய ஜீவனை நமக்கு கொடுத்து, நம்மை பரலோக ராஜ்யத்திற்கு தகுதியாக்குவார். ஆமென் அல்லேலூயா!
'அப்பொழுது அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; ஆயினும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டிருக்கிறவைகளை அவர்களுக்குச் சாட்சியாகச் செலுத்து என்று கண்டிப்பாய்ச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார்'. அவர் ஏன் அவனை உடனே அனுப்பிவிட்டார் என்றால், இந்த அற்புதத்தை காணும் மக்கள், அவரை அற்புதம் செய்கிறவராகவே பார்ப்பார்களே ஒழிய இராஜ்யத்தின் சுவிசேஷத்தை கேட்கிறவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதே. அவர் எங்கு சென்றாலும் அவரை சுகமளிக்கிறவராக காண்பார்களே ஒழிய, அவர் இந்த உலகத்திற்கு வந்த நோக்கத்தை உணர மாட்டார்கள். இந்த நாளின் சுவிசேஷகருக்கும் அவருக்கும் தான் எத்தனை வித்தியாசம்! இந்த நாட்களில் ஏதோ ஒரு அற்புதம் நடந்து விட்டால்தான் எத்தனை எத்தனை பிரசித்தப்படுத்துதல், விளம்பரங்கள்!! ஒவ்வொரு முறையும் அதை கூட்டத்தில் சொல்லி, தங்களை உயர்த்தி காண்பிக்கும் தன்மைகள்!!
அந்த மனிதனிடம் கர்த்தர் வெளியே சொல்ல வேண்டாம் என்றாலும் அவன் கேட்காமல், 'அவனோ புறப்பட்டுப் போய், இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான்' என்று பார்க்கிறோம். ஆம், கர்த்தர் ஒருவனுடைய வாழ்வை தொடும்போதுதான் அது எத்தனை எத்தனை சந்தோஷத்தை அவன் வாழ்வில் கொண்டு வருகிறது! அவனால் சும்மா இருக்க முடியாது. என் தேவன் எனக்கு செய்த அற்புதத்தை பாருங்கள் என்று அவன் துள்ளி குதித்து, கர்த்தரை பிரசித்தம் செய்கிறவனாக மாறி விடுவான். முதலில் தீட்டு தீட்டு என்று கதறினவன், இப்போது நான் சுத்தமானேன், சுத்தமானேன் என்று சந்தோஷமாய் கூற தொடங்கி விடுவான். அல்லேலூயா!
இது போன்ற புதிதாக்கப்பட்ட, நம் வாழ்க்கையை மாற்றிவிடும் கிறிஸ்துவின் மனதுருக்கமான தொடுதலுக்கு நம்மை அர்ப்பணிப்போமா? அந்த குஷ்டரோகி எத்தனை அசுத்தமானவனாக இருந்திருந்தாலும் அவன் வாழ்க்கையில் ஒரு அற்புதமான புது மாற்றம் ஏற்பட்டது போல கர்த்தரிடம் வரும் ஒவ்வொரு பாவியின் வாழ்விலும், அது எப்பேற்பட்ட அசுத்தமாய் இருந்தாலும் கர்த்தர் தமது பரிசுத்த வல்லமையுள்ள இரத்தத்தால் கழுவி நம்மை சுத்திகரித்து, நம்மை புதியவர்களாக மாற்றி விடுகிறார். நம்மை அதற்கு அர்ப்பணிப்போமா? ஆமென் அல்லேலூயா!
தொடும் என் கண்களையே
உம்மை நான் காண வேண்டுமே
இயேசுவே உம்மையே நான்
காண வேண்டுமே
..
தொடும் என் ஆண்டவரே
தொடும் என் வாழ்வினையே
இயேசுவே உம்மை போல்
என்னை மாற்றுமே
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த வேளையிலும் யார் யார் தங்களை கிறிஸ்து சுத்தமாக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அவர்களது பாவ கறைகளை இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவி சுத்திகரிப்பீராக. அந்த குஷ்டரோகியை கண்டு மனதுருகி, எனக்கு சித்தமுண்டு, சுத்தமாகு என்று அவனை தொட்டு சுகப்படுத்தின தேவன், இன்றும் மாறாதவராக அவரண்டை வருகிறவர்களை புறம்பே தள்ளாதவராக, ஏற்று கொள்வதற்காக உமக்கு நன்றி. தொடர்ந்து பரிசுத்தமாய் வாழ கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
No comments:
Post a Comment