'நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்' - (மத்தேயு 24:37-39).
2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி, ரிக்டர் அளவு கோலில் 9 அளவின்படி, மிகப்பெரிய நிலநடுக்கம் இந்திய பெருங்கடலில் 6 மைல் ஆழத்தில் ஏற்பட்டது. 40 வருடங்களில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய நில அதிர்ச்சியினால், ஏற்பட்ட சக்தி, ஜப்பானில் ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டுகளில் ஒரு மில்லியன் போட்டால் எந்த அளவு சக்தி வருமோ அதை போன்ற சக்தியை இந்திய பெருங்கடலில் இந்த நில நடுக்கம் ஏற்படுத்திற்று. இந்தோனேஷியாவில் உள்ள சுமத்திரா தீவு அந்த அதிர்ச்சியினால் 100 அடி அகன்றது.
அந்த சக்தி கடலின் அடியில் பெரும் அலைகளை உருவாக்கிற்று. அது 600 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை மோதிற்று. ஆனால் கரையில் தண்ணீர் ஆழமில்லாதபடியினால், அதன் வேகம் சற்று குறைந்தது. ஆனாலும் 50 அடி உயரத்திற்கு அதன் அலைகள் மேல் நோக்கி எழுந்தது. இவை இந்தோனேஷியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் இந்தியாவை சுமார் 500 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து தாக்கியபோது, 1,50,000 பேர் உயிரிழந்தனர். மற்றும் எத்தனையோ பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் நாசமடைந்தன.
இப்போதும் ஜப்பானை சீர்குலைத்த சுனாமி மற்றும் நிலநடுக்கத்தை பற்றி நாம் பார்த்து கொண்டிருக்கிறோம். இதுவரை வந்த செய்தியின்படி சுமார் 20,000 பேர் மரித்திருக்கிறார்கள். உலக சரித்திரத்தில் நடைபெற்ற துக்க சம்பவங்களில் மிகவும் மோசமான ஒன்றாக இது கருதப்படுகிறது. பல நாடுகளிலிருந்து, ஜப்பானுக்கு உதவி கரம் நீட்டி மண்ணில் உயிரோடு புதைக்கப்பட்டவர்களை மீட்பதற்காக வந்து கொண்டிருக்கின்றனர். உலகம் இங்கு நடைபெறும் சம்பவங்களை பயத்தோடும், நடுக்கத்தோடும் கண்டு வருகிறது. ஆனால் கிறிஸ்தவர்களாகிய நாம் இதை குறித்து ஆச்சரியப்பட தேவையில்லை. ஏனென்றால் தம் வருகைக்கு முன் நடக்கும் என்று இயேசுகிறிஸ்து ஏற்கனவே கூறியிருக்கிறார் (மத்தேயு 24:7-8).
இதை படிக்கிற ஒவ்வொருவரும் ஜப்பான் நாட்டிற்காக ஜெபிக்க வேண்டும். அணு உலைகள் அங்கு வெடித்து அதன் விளைவாக அணுகதிர் வீச்சுகள் ஒருபுறம் அச்சுறுத்த, சுனாமி விட்டு போன அவல நிலையை சரிசெய்யும் நிலைமை ஒருபுறம் மலையை போல் காத்திருக்க, அங்குள்ள எரிமலை ஒன்று சாம்பலை கக்கி கொண்டு இருக்க, பயங்கரமான குளிரில் (2 டிகிரி சென்டிகிரேட்) மக்கள் வீடில்லாமல், மின்சார வசதியில்லாமல் குடிக்க தண்ணீரில்லாமல் தவிக்கிற பரிதாபம் ஒருபுறம் இருக்க, ஒரு நாளில் மிகவும் வளப்பமாக செழிப்பாக இருந்த ஜப்பானை சுனாமி உருக்குலைய வைத்திருக்கிறது. டெக்னாலஜியில் முதன்மையாக இருந்த ஜப்பானின் எந்த அறிவும், அதன் அழிவை தடுத்து நிறுத்த முடியவில்லை. அதன் அதிபர், நாங்கள் திரும்பவும் தலை நிமிர்ந்து நிற்போம் என்று சொன்னாலும், ஜப்பான் 600 வருடங்கள் பின் நோக்கி சென்று விட்டது என்றே உலகம் அதை காண்கிறது.
பிரியமானவர்களே, இது ஒரு புறம் இருந்தாலும், திரும்ப ஒரு பயங்கரமான சுனாமி வரப்போகிறது. அது உலகமுழுவதற்கும் வரப்போகிறது. அதிலிருந்து யாரும் தப்ப முடியாது. அது தண்ணீரினால் வரப்போகிற சுனாமி அல்ல, தேவ கோபாக்கினையின் சுனாமியாகும். சபைக்கு இன்னும் அதிக நாட்களில்லை, கர்த்தரை பற்றி அறிவிப்பதற்கு! இந்த பூமி அதிர்ச்சியும், உலகத்தில் நடைபெற்று வருகிற சமாதான குறைவுகளும், கிறிஸ்துவின் வருகை மிக சமீபமாயிருப்பதை நமக்கு வலியுறுத்தும் இந்த கடைசி கால கட்டத்தில் இருக்கும் நாம் சும்மா இவற்றை பார்த்து, நமக்கென்ன என்று இருக்க கூடாது. சபைக்கு தேவன் ஏற்கனவே வேதத்தின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறபடியால் அவற்றை அறிந்த நாம் ஏனோதானோ வென்று வாழக்கூடாது, மற்றவர்களுக்கு கர்த்தரின் வருகையை நிச்சயமாக நாம் அறிவிக்க வேண்டும்.
சபைகள் நிகழும் நிகழ்வுகளை பார்த்து, எழுச்சி பெற வேண்டும். 'இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்' (லூக்கா 21:28) என்று இயேசுகிறிஸ்து கூறினார். நமது சரீர மீட்பு சமீபமென்றாலும், மற்றவர்களின் மீட்புக்கென்று நாம் ஜெபிக்கிறவர்களாக மாற வேண்டும்.
சபைகளில் முழு இரவு ஜெபமென்றால், திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்க கூடுபவர்கள் இன்றைய நாட்களில் குறைந்து போய் கொண்டிருக்கிறார்கள். தூக்கமும் பண மயக்கமும் தேவ ஜனங்களை சோம்பலாக்கி கொண்டிருக்கிறது. நாம் திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கவில்லை என்றால் தேவ கோபம் இறங்கும்போது நாம் அதற்காக ஜெபிக்கவில்லை என்று குற்றம் நம்மில் காணப்படும். முழு இரவு ஜெப கூட்டம் இல்லாத சபைகளில் ஜெபங்கள் ஆரம்பிக்கப்படட்டும். சபையே விழித்திடு! இருக்கும் கொஞ்ச நாட்களில் நாம் தேவனுக்காக எழும்பி பிரகாசிப்போம். முழு இரவு ஜெபம், உபவாச கூட்டம் என்று ஜெபங்களில் கூடி ஜெபித்து கர்த்தரின் கிருபைகளையும் இரக்கத்தையும் தேசங்களுக்காக பெற்று கொள்வோம். நம் தனி ஜெபங்களில் தேவனோடு நாடுகளுக்காக மன்றாடுவோம்! தேவன் அவற்றை கேட்டு, தேசங்களுக்கு ஷேமத்தை தருவார்! ஆமென் அல்லேலூயா!
இருள் சூழும் காலம் இனிவருதே
அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்
திறவுண்ட வாசல் அடைபடும் முன்
நொறுங்குண்ட மனதாய் முன் செல்வோர் யார்
..
திறவுண்ட வாசல் அடைபடும் முன்
நொறுங்குண்ட மனதாய் முன் செல்வோர் யார்
நாட்கள் கொடியதாய் மாறிடுதே
காலத்தை ஆதாயம் செய்திடுவோம்
இயேசுகிறிஸ்து கடைசிநாட்களை குறித்து அறிவித்தபோது, அவற்றை நோவாவின் நாட்களை போல இருக்கும் என கூறினார். நோவாவின் நாட்களில் பூமி எப்படி இருந்தது? அதை குறித்து, ஆதியாகமம் 6:5-13 வரை உள்ள வசனங்கள் நமக்கு விளக்குகிறது. பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது (11ம் வசனம்) என்று பார்க்கிறோம். அப்போது வாழ்ந்த மனிதர்களுக்கு கர்த்தரை குறித்த பயமோ, அவருடைய சித்தத்தை செய்வதோ, அவரை தொழுது கொள்வதோ இல்லாதிருந்தது. பாவத்தை தண்ணீரை போல குடித்தார்கள். அதை கண்ட தேவனுக்கு 'தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது' என்று பார்க்கிறோம்.
இந்த நாட்களிலே நாம் பார்க்கும்போது, அந்நாட்களுக்கு இந்நாட்கள் குறைவில்லாதது போல பாவம் எத்தனையாய் மலிந்து கிடக்கிறது! நிர்வாண படங்கள் எடுத்து விற்பதில் அமெரிக்கா முன்னணியில் நிற்கிறது. 12 மில்லியன் டாலர்கள் வருடத்திற்கு அமெரிக்காவில் மட்டும், மற்றும் உலக முழுவதிலும் 57 மில்லியன் டாலர்கள் வருடத்தில் சம்பாதிக்கின்றனர். எத்தனை அருவருப்பானது பாருங்கள்! இவை மற்ற செய்தி சேனல்களின் கூட்டு சம்பாத்தியத்தை பார்க்கிலும் பல மடங்கு அதிகமாகும்.
அபார்ஷன்கள் அமெரிக்காவில் மட்டும் 1,370,000 செய்யப்படுகின்றது. அதாவது ஒரு நாளில் மாத்திரம் 3,753 குழந்தைகள் கொலை செய்யப்படுகின்றன. உலகமுழுவதும் எத்தனை அபார்ஷன்கள் செய்யப்படுகின்றன என்பதை கணக்கிட்டு பாருங்கள்! திருமணத்திற்கு முன்பே பிள்ளைகளை பெற்று கொள்ளும் காரியமும் மிகவும் அதிகமாக அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. தேவன் அருவருக்கிற காரியங்களை துணிந்து செய்யும் அமெரிக்காவிற்கும், மற்ற நாடுகளுக்கும் தேவ கோபாக்கினையாகிய சுனாமி நிச்சயம் வரத்தான் போகிறது!
மற்றும் தேவன் அருவருக்கிற homosexuality and lesbianism தற்போது எங்கு பார்த்தாலும் மலிந்து காணப்படுகிறது. இதை தவிர கொலைகளும், கொடூரங்களும், கற்பழிப்புகளும், கொள்ளைகளும் மிகவும் மலிந்து காணப்படுகிறது.
நோவாவின் காலத்திலிருந்ததை விட மிகவும் அதிக மடங்கு பாவத்தில் உலகம் காணப்படுகிறது. 'தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது' என்ற வசனத்தின்படி இப்போது இருக்கும் நிலையில் தேவன் உலகத்தை பார்த்து மனஸ்தாபப்படுகிறவராகவே இருக்கிறார். ஆனாலும் அவருடைய பெரிதான கிருபையால் இன்னும் அழிக்காமல், இந்த ஜனம் மனம் திரும்ப மாட்டார்களோ என்று நோக்கி கொண்டிருக்கிறார். அவருடைய கிருபையை நாம் அலட்சியம் செய்யாமல், அவரையே பற்றி கொள்வோமா?
ஜப்பானில் முந்திய தினமே சுனாமியை குறித்த எச்சரிப்பும், நிலநடுக்கத்தை குறித்த எச்சரிப்பும் விடுக்கப்பட்டிருந்தது. அதை கேட்டு கடலோரத்தில் குடியிருந்தவர்கள் தங்களை காத்து கொண்டிருந்தால், பாதுகாப்பான இடத்திற்கு சென்றிருந்தால், அவர்கள் தப்பியிருப்பார்கள். மற்றும், கடலில் பயணம் செய்யாமலும், அந்த பக்கம் செல்லாமலும் இருந்திருந்தால், அவர்கள் ஜீவன் தப்பியிருக்கும். எப்போதும் வரும் நிலநடுக்கம் தானே என்று அசட்டையாக இருந்திருந்தால், அவர்கள் எதிர்பாராத விதமாக சுனாமி அவர்களை அப்படியே அடித்து கொண்டு போயிருக்கும்.
நோவா பேழையை கட்டி கொண்டு இருக்கும்போதே 120 வருடங்களாக மக்களுக்கு மழை வரப்போகிறது என்று எச்சரிக்கை விடுத்து கொண்டே இருந்தார். அவர் பிரசங்கித்து கொண்டு இருக்கும்போதே ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள் என்று வேதம் நமக்கு கூறுகிறது.
இப்போதும் தேவன் தம்முடைய ஊழியக்காரரை கொண்டு வரபோகும் தேவ கோபாக்கினைக்கு தப்பித்து கொள்ளும்படி எச்சரித்து கொண்டே இருக்கிறார். ஆனால், அதை கேட்கும் ஜனங்கள், இவர்கள் எப்போதும் இப்படித்தான் எச்சரிப்பார்கள் என்று அசட்டையாக இருந்தால், ஒரு நாள் தேவ கோபாக்கினையாகிய சுனாமி வரும்போது அப்படியே அடித்து செல்லப்படுவார்கள்.
'அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள்' என்ற இடம் மிக முக்கியமானது. சுனாமி ஜப்பானை தாக்கியபோது, அவரவர் தங்கள் வேலைகளில் இருந்தார்கள். அவர்கள் நினையாத வேளையிலே சுனாமி வந்தபோது, அவர்களுக்கு இரண்டாவது தருணம் கொடுக்கப்படவில்லை, அப்படியே அடித்து கொண்டு செல்லப்பட்டார்கள். அதில் எத்தனை பேர் இரட்சிக்கப்பட்டிருந்தார்களோ தெரியவில்லை, மற்றவர்கள் தேவனற்ற நித்திய அழிவிற்கு நேராக சென்றிருப்பார்கள்.
இயேசுகிறிஸ்துவின் வருகையும் அதைப்போலத்தான் இருக்கும். எல்லாரும் தங்கள் வேலைகளிலும் தங்கள் இஷ்டம் போல ஜீவித்து கொண்டு இருக்கும்போது கர்த்தருடைய வருகை இருக்கும். அது ஒரு இமைப்பொழுதிலே நடந்து விடும். கர்த்தரை ஏற்று கொண்டவர்கள் அவரோடு எடுத்து கொள்ளப்படுவார்கள். கைவிடப்பட்டவர்களின் நிலைமையோ மிகவும் பயங்கரமாயிருக்கும். தேவக்கோபாக்கினை அடுத்தடுத்து, அவர்கள் மேல் தொடர்ந்து வரும். ஏழு முத்திரை நியாயத்தீர்ப்பு, ஏழு எக்காள நியாயத்தீர்ப்பு மற்றும் ஏழு கோபக்கலச நியாயத்தீர்ப்பு என்று அடுத்தடுத்து வரும் கோபாக்கினையை தாங்க முடியாமல், மனிதர் அவதியுறுவர்.
இப்பொழுதே தேவன் கொடுக்கும் எச்சரிப்பை பெற்று கர்த்தர் கொடுக்கும் கிருபையின் காலத்திலே கர்த்தரை ஏற்று கொள்ள வேண்டும். எந்த நேரத்திலும் என்ன நடந்தாலும் கர்த்தரை சந்திக்க நீங்கள் ஆயத்தமா? ஆயத்தமாயிருந்தால், மற்றவர்களையும் ஆயத்தப்படுத்துங்கள். இயேசுகிறிஸ்து சீக்கிரம் வருகிறார். மாரநாதா! ஆமென் அல்லேலூயா!
இராஜாதி இராஜன் இயேசு வருவார் சந்திக்க ஆயத்தமா?
வருவேன் என்றவர் சீக்கிரம் வருவார் சந்திக்க ஆயத்தமா?
..
கேள்! கேள்! மானிடரே! சிந்திக்க ஆயத்தமா?
இராஜாதி இராஜனாய் வந்திடுவார் சந்திக்க ஆயத்தமா?
உலகமனைத்துமே கண்டிடுமே சந்திக்க ஆயத்தமா?
பரலோகம் வாழ்வின் நல்பாக்கியத்தை சந்திக்க ஆயத்தமா?
ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியால், ஏற்பட்ட சீர்குலைவுகளை தயவாய் மாற்றும். அந்த மக்களின் கண்ணீரை துடைத்தருளும். அவர்கள் மீண்டும் எழும்பி நிற்க கிருபை செய்யும். வரப்போகும் தேவ கோபாக்கினைக்கு தேசங்கள் தப்பிக்கத்தக்கதாக தேவ ஜனங்களை முழங்காலில் நின்று திறப்பின் வாசலில் மன்றாடுகிறவர்களாக மாறறுவீராக. பின்மாரியின் அபிஷேகத்தை ஒவ்வொரு சபைகளிலும் ஊற்றுவீராக. சபைகள் எழும்பட்டும், கர்த்தருக்காக பிரகாசிக்கட்டும். தேசம் அழியாதபடி திறப்பின் வாசலில் நிற்கட்டும். அப்படிப்பட்ட சபைகளாக ஒவ்வொரு சபைகளையும் மாற்றுவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி, ரிக்டர் அளவு கோலில் 9 அளவின்படி, மிகப்பெரிய நிலநடுக்கம் இந்திய பெருங்கடலில் 6 மைல் ஆழத்தில் ஏற்பட்டது. 40 வருடங்களில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய நில அதிர்ச்சியினால், ஏற்பட்ட சக்தி, ஜப்பானில் ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டுகளில் ஒரு மில்லியன் போட்டால் எந்த அளவு சக்தி வருமோ அதை போன்ற சக்தியை இந்திய பெருங்கடலில் இந்த நில நடுக்கம் ஏற்படுத்திற்று. இந்தோனேஷியாவில் உள்ள சுமத்திரா தீவு அந்த அதிர்ச்சியினால் 100 அடி அகன்றது.
அந்த சக்தி கடலின் அடியில் பெரும் அலைகளை உருவாக்கிற்று. அது 600 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை மோதிற்று. ஆனால் கரையில் தண்ணீர் ஆழமில்லாதபடியினால், அதன் வேகம் சற்று குறைந்தது. ஆனாலும் 50 அடி உயரத்திற்கு அதன் அலைகள் மேல் நோக்கி எழுந்தது. இவை இந்தோனேஷியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் இந்தியாவை சுமார் 500 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து தாக்கியபோது, 1,50,000 பேர் உயிரிழந்தனர். மற்றும் எத்தனையோ பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் நாசமடைந்தன.
இப்போதும் ஜப்பானை சீர்குலைத்த சுனாமி மற்றும் நிலநடுக்கத்தை பற்றி நாம் பார்த்து கொண்டிருக்கிறோம். இதுவரை வந்த செய்தியின்படி சுமார் 20,000 பேர் மரித்திருக்கிறார்கள். உலக சரித்திரத்தில் நடைபெற்ற துக்க சம்பவங்களில் மிகவும் மோசமான ஒன்றாக இது கருதப்படுகிறது. பல நாடுகளிலிருந்து, ஜப்பானுக்கு உதவி கரம் நீட்டி மண்ணில் உயிரோடு புதைக்கப்பட்டவர்களை மீட்பதற்காக வந்து கொண்டிருக்கின்றனர். உலகம் இங்கு நடைபெறும் சம்பவங்களை பயத்தோடும், நடுக்கத்தோடும் கண்டு வருகிறது. ஆனால் கிறிஸ்தவர்களாகிய நாம் இதை குறித்து ஆச்சரியப்பட தேவையில்லை. ஏனென்றால் தம் வருகைக்கு முன் நடக்கும் என்று இயேசுகிறிஸ்து ஏற்கனவே கூறியிருக்கிறார் (மத்தேயு 24:7-8).
இதை படிக்கிற ஒவ்வொருவரும் ஜப்பான் நாட்டிற்காக ஜெபிக்க வேண்டும். அணு உலைகள் அங்கு வெடித்து அதன் விளைவாக அணுகதிர் வீச்சுகள் ஒருபுறம் அச்சுறுத்த, சுனாமி விட்டு போன அவல நிலையை சரிசெய்யும் நிலைமை ஒருபுறம் மலையை போல் காத்திருக்க, அங்குள்ள எரிமலை ஒன்று சாம்பலை கக்கி கொண்டு இருக்க, பயங்கரமான குளிரில் (2 டிகிரி சென்டிகிரேட்) மக்கள் வீடில்லாமல், மின்சார வசதியில்லாமல் குடிக்க தண்ணீரில்லாமல் தவிக்கிற பரிதாபம் ஒருபுறம் இருக்க, ஒரு நாளில் மிகவும் வளப்பமாக செழிப்பாக இருந்த ஜப்பானை சுனாமி உருக்குலைய வைத்திருக்கிறது. டெக்னாலஜியில் முதன்மையாக இருந்த ஜப்பானின் எந்த அறிவும், அதன் அழிவை தடுத்து நிறுத்த முடியவில்லை. அதன் அதிபர், நாங்கள் திரும்பவும் தலை நிமிர்ந்து நிற்போம் என்று சொன்னாலும், ஜப்பான் 600 வருடங்கள் பின் நோக்கி சென்று விட்டது என்றே உலகம் அதை காண்கிறது.
பிரியமானவர்களே, இது ஒரு புறம் இருந்தாலும், திரும்ப ஒரு பயங்கரமான சுனாமி வரப்போகிறது. அது உலகமுழுவதற்கும் வரப்போகிறது. அதிலிருந்து யாரும் தப்ப முடியாது. அது தண்ணீரினால் வரப்போகிற சுனாமி அல்ல, தேவ கோபாக்கினையின் சுனாமியாகும். சபைக்கு இன்னும் அதிக நாட்களில்லை, கர்த்தரை பற்றி அறிவிப்பதற்கு! இந்த பூமி அதிர்ச்சியும், உலகத்தில் நடைபெற்று வருகிற சமாதான குறைவுகளும், கிறிஸ்துவின் வருகை மிக சமீபமாயிருப்பதை நமக்கு வலியுறுத்தும் இந்த கடைசி கால கட்டத்தில் இருக்கும் நாம் சும்மா இவற்றை பார்த்து, நமக்கென்ன என்று இருக்க கூடாது. சபைக்கு தேவன் ஏற்கனவே வேதத்தின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறபடியால் அவற்றை அறிந்த நாம் ஏனோதானோ வென்று வாழக்கூடாது, மற்றவர்களுக்கு கர்த்தரின் வருகையை நிச்சயமாக நாம் அறிவிக்க வேண்டும்.
சபைகள் நிகழும் நிகழ்வுகளை பார்த்து, எழுச்சி பெற வேண்டும். 'இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்' (லூக்கா 21:28) என்று இயேசுகிறிஸ்து கூறினார். நமது சரீர மீட்பு சமீபமென்றாலும், மற்றவர்களின் மீட்புக்கென்று நாம் ஜெபிக்கிறவர்களாக மாற வேண்டும்.
சபைகளில் முழு இரவு ஜெபமென்றால், திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்க கூடுபவர்கள் இன்றைய நாட்களில் குறைந்து போய் கொண்டிருக்கிறார்கள். தூக்கமும் பண மயக்கமும் தேவ ஜனங்களை சோம்பலாக்கி கொண்டிருக்கிறது. நாம் திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கவில்லை என்றால் தேவ கோபம் இறங்கும்போது நாம் அதற்காக ஜெபிக்கவில்லை என்று குற்றம் நம்மில் காணப்படும். முழு இரவு ஜெப கூட்டம் இல்லாத சபைகளில் ஜெபங்கள் ஆரம்பிக்கப்படட்டும். சபையே விழித்திடு! இருக்கும் கொஞ்ச நாட்களில் நாம் தேவனுக்காக எழும்பி பிரகாசிப்போம். முழு இரவு ஜெபம், உபவாச கூட்டம் என்று ஜெபங்களில் கூடி ஜெபித்து கர்த்தரின் கிருபைகளையும் இரக்கத்தையும் தேசங்களுக்காக பெற்று கொள்வோம். நம் தனி ஜெபங்களில் தேவனோடு நாடுகளுக்காக மன்றாடுவோம்! தேவன் அவற்றை கேட்டு, தேசங்களுக்கு ஷேமத்தை தருவார்! ஆமென் அல்லேலூயா!
இருள் சூழும் காலம் இனிவருதே
அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்
திறவுண்ட வாசல் அடைபடும் முன்
நொறுங்குண்ட மனதாய் முன் செல்வோர் யார்
..
திறவுண்ட வாசல் அடைபடும் முன்
நொறுங்குண்ட மனதாய் முன் செல்வோர் யார்
நாட்கள் கொடியதாய் மாறிடுதே
காலத்தை ஆதாயம் செய்திடுவோம்
இயேசுகிறிஸ்து கடைசிநாட்களை குறித்து அறிவித்தபோது, அவற்றை நோவாவின் நாட்களை போல இருக்கும் என கூறினார். நோவாவின் நாட்களில் பூமி எப்படி இருந்தது? அதை குறித்து, ஆதியாகமம் 6:5-13 வரை உள்ள வசனங்கள் நமக்கு விளக்குகிறது. பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது (11ம் வசனம்) என்று பார்க்கிறோம். அப்போது வாழ்ந்த மனிதர்களுக்கு கர்த்தரை குறித்த பயமோ, அவருடைய சித்தத்தை செய்வதோ, அவரை தொழுது கொள்வதோ இல்லாதிருந்தது. பாவத்தை தண்ணீரை போல குடித்தார்கள். அதை கண்ட தேவனுக்கு 'தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது' என்று பார்க்கிறோம்.
இந்த நாட்களிலே நாம் பார்க்கும்போது, அந்நாட்களுக்கு இந்நாட்கள் குறைவில்லாதது போல பாவம் எத்தனையாய் மலிந்து கிடக்கிறது! நிர்வாண படங்கள் எடுத்து விற்பதில் அமெரிக்கா முன்னணியில் நிற்கிறது. 12 மில்லியன் டாலர்கள் வருடத்திற்கு அமெரிக்காவில் மட்டும், மற்றும் உலக முழுவதிலும் 57 மில்லியன் டாலர்கள் வருடத்தில் சம்பாதிக்கின்றனர். எத்தனை அருவருப்பானது பாருங்கள்! இவை மற்ற செய்தி சேனல்களின் கூட்டு சம்பாத்தியத்தை பார்க்கிலும் பல மடங்கு அதிகமாகும்.
அபார்ஷன்கள் அமெரிக்காவில் மட்டும் 1,370,000 செய்யப்படுகின்றது. அதாவது ஒரு நாளில் மாத்திரம் 3,753 குழந்தைகள் கொலை செய்யப்படுகின்றன. உலகமுழுவதும் எத்தனை அபார்ஷன்கள் செய்யப்படுகின்றன என்பதை கணக்கிட்டு பாருங்கள்! திருமணத்திற்கு முன்பே பிள்ளைகளை பெற்று கொள்ளும் காரியமும் மிகவும் அதிகமாக அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. தேவன் அருவருக்கிற காரியங்களை துணிந்து செய்யும் அமெரிக்காவிற்கும், மற்ற நாடுகளுக்கும் தேவ கோபாக்கினையாகிய சுனாமி நிச்சயம் வரத்தான் போகிறது!
மற்றும் தேவன் அருவருக்கிற homosexuality and lesbianism தற்போது எங்கு பார்த்தாலும் மலிந்து காணப்படுகிறது. இதை தவிர கொலைகளும், கொடூரங்களும், கற்பழிப்புகளும், கொள்ளைகளும் மிகவும் மலிந்து காணப்படுகிறது.
நோவாவின் காலத்திலிருந்ததை விட மிகவும் அதிக மடங்கு பாவத்தில் உலகம் காணப்படுகிறது. 'தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது' என்ற வசனத்தின்படி இப்போது இருக்கும் நிலையில் தேவன் உலகத்தை பார்த்து மனஸ்தாபப்படுகிறவராகவே இருக்கிறார். ஆனாலும் அவருடைய பெரிதான கிருபையால் இன்னும் அழிக்காமல், இந்த ஜனம் மனம் திரும்ப மாட்டார்களோ என்று நோக்கி கொண்டிருக்கிறார். அவருடைய கிருபையை நாம் அலட்சியம் செய்யாமல், அவரையே பற்றி கொள்வோமா?
ஜப்பானில் முந்திய தினமே சுனாமியை குறித்த எச்சரிப்பும், நிலநடுக்கத்தை குறித்த எச்சரிப்பும் விடுக்கப்பட்டிருந்தது. அதை கேட்டு கடலோரத்தில் குடியிருந்தவர்கள் தங்களை காத்து கொண்டிருந்தால், பாதுகாப்பான இடத்திற்கு சென்றிருந்தால், அவர்கள் தப்பியிருப்பார்கள். மற்றும், கடலில் பயணம் செய்யாமலும், அந்த பக்கம் செல்லாமலும் இருந்திருந்தால், அவர்கள் ஜீவன் தப்பியிருக்கும். எப்போதும் வரும் நிலநடுக்கம் தானே என்று அசட்டையாக இருந்திருந்தால், அவர்கள் எதிர்பாராத விதமாக சுனாமி அவர்களை அப்படியே அடித்து கொண்டு போயிருக்கும்.
நோவா பேழையை கட்டி கொண்டு இருக்கும்போதே 120 வருடங்களாக மக்களுக்கு மழை வரப்போகிறது என்று எச்சரிக்கை விடுத்து கொண்டே இருந்தார். அவர் பிரசங்கித்து கொண்டு இருக்கும்போதே ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள் என்று வேதம் நமக்கு கூறுகிறது.
இப்போதும் தேவன் தம்முடைய ஊழியக்காரரை கொண்டு வரபோகும் தேவ கோபாக்கினைக்கு தப்பித்து கொள்ளும்படி எச்சரித்து கொண்டே இருக்கிறார். ஆனால், அதை கேட்கும் ஜனங்கள், இவர்கள் எப்போதும் இப்படித்தான் எச்சரிப்பார்கள் என்று அசட்டையாக இருந்தால், ஒரு நாள் தேவ கோபாக்கினையாகிய சுனாமி வரும்போது அப்படியே அடித்து செல்லப்படுவார்கள்.
'அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள்' என்ற இடம் மிக முக்கியமானது. சுனாமி ஜப்பானை தாக்கியபோது, அவரவர் தங்கள் வேலைகளில் இருந்தார்கள். அவர்கள் நினையாத வேளையிலே சுனாமி வந்தபோது, அவர்களுக்கு இரண்டாவது தருணம் கொடுக்கப்படவில்லை, அப்படியே அடித்து கொண்டு செல்லப்பட்டார்கள். அதில் எத்தனை பேர் இரட்சிக்கப்பட்டிருந்தார்களோ தெரியவில்லை, மற்றவர்கள் தேவனற்ற நித்திய அழிவிற்கு நேராக சென்றிருப்பார்கள்.
இயேசுகிறிஸ்துவின் வருகையும் அதைப்போலத்தான் இருக்கும். எல்லாரும் தங்கள் வேலைகளிலும் தங்கள் இஷ்டம் போல ஜீவித்து கொண்டு இருக்கும்போது கர்த்தருடைய வருகை இருக்கும். அது ஒரு இமைப்பொழுதிலே நடந்து விடும். கர்த்தரை ஏற்று கொண்டவர்கள் அவரோடு எடுத்து கொள்ளப்படுவார்கள். கைவிடப்பட்டவர்களின் நிலைமையோ மிகவும் பயங்கரமாயிருக்கும். தேவக்கோபாக்கினை அடுத்தடுத்து, அவர்கள் மேல் தொடர்ந்து வரும். ஏழு முத்திரை நியாயத்தீர்ப்பு, ஏழு எக்காள நியாயத்தீர்ப்பு மற்றும் ஏழு கோபக்கலச நியாயத்தீர்ப்பு என்று அடுத்தடுத்து வரும் கோபாக்கினையை தாங்க முடியாமல், மனிதர் அவதியுறுவர்.
இப்பொழுதே தேவன் கொடுக்கும் எச்சரிப்பை பெற்று கர்த்தர் கொடுக்கும் கிருபையின் காலத்திலே கர்த்தரை ஏற்று கொள்ள வேண்டும். எந்த நேரத்திலும் என்ன நடந்தாலும் கர்த்தரை சந்திக்க நீங்கள் ஆயத்தமா? ஆயத்தமாயிருந்தால், மற்றவர்களையும் ஆயத்தப்படுத்துங்கள். இயேசுகிறிஸ்து சீக்கிரம் வருகிறார். மாரநாதா! ஆமென் அல்லேலூயா!
இராஜாதி இராஜன் இயேசு வருவார் சந்திக்க ஆயத்தமா?
வருவேன் என்றவர் சீக்கிரம் வருவார் சந்திக்க ஆயத்தமா?
..
கேள்! கேள்! மானிடரே! சிந்திக்க ஆயத்தமா?
இராஜாதி இராஜனாய் வந்திடுவார் சந்திக்க ஆயத்தமா?
உலகமனைத்துமே கண்டிடுமே சந்திக்க ஆயத்தமா?
பரலோகம் வாழ்வின் நல்பாக்கியத்தை சந்திக்க ஆயத்தமா?
ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியால், ஏற்பட்ட சீர்குலைவுகளை தயவாய் மாற்றும். அந்த மக்களின் கண்ணீரை துடைத்தருளும். அவர்கள் மீண்டும் எழும்பி நிற்க கிருபை செய்யும். வரப்போகும் தேவ கோபாக்கினைக்கு தேசங்கள் தப்பிக்கத்தக்கதாக தேவ ஜனங்களை முழங்காலில் நின்று திறப்பின் வாசலில் மன்றாடுகிறவர்களாக மாறறுவீராக. பின்மாரியின் அபிஷேகத்தை ஒவ்வொரு சபைகளிலும் ஊற்றுவீராக. சபைகள் எழும்பட்டும், கர்த்தருக்காக பிரகாசிக்கட்டும். தேசம் அழியாதபடி திறப்பின் வாசலில் நிற்கட்டும். அப்படிப்பட்ட சபைகளாக ஒவ்வொரு சபைகளையும் மாற்றுவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
No comments:
Post a Comment