Search This Blog
Saturday, 10 May 2014
Friday, 9 May 2014
விலையற்ற செல்வம
Thursday, 8 May 2014
Wednesday, 7 May 2014
சுயநல ஜெபமா? பொதுநல ஜெபமா?
Tuesday, 6 May 2014
பெலன் ஒன்றும் இல்லை தேவா
பல்லவி
பெலன் ஒன்றும் இல்லை தேவா
ஆவியால் பலப்படுத்தும்
சத்துவம் இல்லாத எனக்கு
சத்துவம் தந்தருளும்
சரணங்கள்
1. சாத்தானை எதிர்க்க பெலன் தாரும்
சோதனை ஜெயிக்க பெலன் தாரும்
மாய உலகினை வெறுக்க
என்னையும் பெலப்படுத்தும் --- பெலன்
2. மானின் கால்களைப் போல
என் கால்களை பெலப்படுத்தும்
நூனின் குமாரனைப் போல
என்னையும் திடப்படுத்தும் --- பெலன்
பூரண அழகுள்ளவரே
பல்லவி
பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
பூரண அழகுள்ளவரே
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே
பதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே
அனுபல்லவி
போற்றுவேன் வணங்குவேன்
துதி பாடி மகிழ்வேன்
சரணங்கள்
1. பாவமதை போக்க வந்த தேவாட்டுக்குட்டியே
பரிசுத்த இரத்தம் ஈன்ற ஜீவாதிபதியே (2)
மருதோன்றி பூங்கொத்து கிச்சிலிப் பழமே
ஒருவராய் மாபெரும் காரியம் செய்பவரே --- போற்றுவேன்
2. மனுக்குல இருள் நீக்கும் நீதியின் சூரியனே
ஒருவரும் சேராத ஒளியில் இருப்பவரே (2)
ஏக சக்ராதிபதி விடிவெள்ளி நட்சத்திரமே
அல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமே --- போற்றுவேன்
3. அழகினை இழந்தே அந்தே கேடடைந்தீரே
முள்முடி சூடியே ஐங்காயம் ஏற்றவரே (2)
என் பாவம் போக்க உம்மை பாழாக்க
உம் ஜீவன் தந்தே ஈசனான எனக்காய் --- போற்றுவேன்
புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே
புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே - (2)
ஆத்துமாக்களை தாருமே
புகழும்வேண்டாமே பெயரும்வேண்டாமே - (2)
இந்தியாவை தாருமே
1. உந்தன் வல்லமையை என்மேல் ஊற்றும் - (2)
அபிஷேகத்தால் என்னை ஆட்கொள்ளும் - (2) --- புகழும்
2. கோடி கோடி மக்களுண்டு - (2)
இந்த தேசம் இயேசுவை காணட்டும் - (2) --- புகழும்
பிதாவே ஆராதிக்கின்றோம்
பிதாவே ஆராதிக்கின்றோம்
இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
ஆவியானவரே அன்பு செய்கின்றோம்
ஆராதிக்கின்றோம்
ஆர்ப்பரிக்கின்றோம்
அன்பு செய்கின்றோம் – உம்மை
1. மகனாக (மகளாக) தெரிந்து கொண்டீர்
மறுபடி பிறக்க வைத்தீர்
ராஜாக்களும் நாங்களே
ஆசாரியர்களும் நாங்களே
2. சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே
மகிமைக்கு பாத்திரரே
மங்காத பிரகாசமே
3. ஸ்தோத்திரமும் கனமும்
வல்லமையும் பெலனும்
மாட்சிமையும் துதியும்
எப்போதும் உண்டாகட்டும்
4. பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே
இனிமேலும் வருபவரே
5. உமது செயல்களெல்லாம்
அதிசயமானவைகள்
உமது வழிகளெல்லாம்
சத்தியமானவைகள்
பிரியமானவனே
பிரியமானவனே – உன்
ஆத்துமா வாழ்வது போல் – நீ
எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாய் இரு மகனே (மகளே)
1. வாழ்க்கை என்பது போராட்டமே
நல்லதொரு போராட்டமே
ஆவிதரும் பட்டயத்தை
எடுத்துப் போராடி வெற்றி பெறு
2. பிரயாணத்தில் மேடு உண்டு
பள்ளங்களும் உண்டு
மிதித்திடுவாய் தாண்டிடுவாய்
மான் கால்கள் உனக்குண்டு மறவாதே
3. ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய்
ஒழுங்கின்படி ஓடு மகனே (மகளே)
நெருங்கி வரும் பாவங்களை
உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே (மகளே)
பலிபீடத்தில் வைத்தேன் என்னை
பலிபீடத்தில் வைத்தேன் என்னை
பாவி என்னை ஏற்றுக் கொள்ளும் - (2)
நிலையில்லா இந்த பூவுலகில்
நித்தம் உன் பாதையிலே - (2)
நின் சித்தம் போல் உம் கரத்தால் -(2)
நித்தம் வழிநடத்தும் - (2)
வாலிப நாட்களில் வாஞ்சையுடன்
வந்தேன் உன் திருப்பாதம் - (2)
வாருமய்யா வந்து என்னை - (2)
வல்லமையால் நிரப்பும் - (2)
பரிசுத்தம் இல்லா இவ்வுலகில்
பரிசுத்தமாய் ஜீவிக்க - (2)
பரிசுத்தமான உம் இரத்தத்தால் - (2)
பரிசுத்தமாக்கி விடும் - (2)
பரலோகமே உம்மைத் துதிப்பதால்
பரலோகமே உம்மைத் துதிப்பதால்
கர்த்தாவே அங்கே வாழ்கிறீர்
உம் ஆலயத்தில் உம்மைத் துதிக்கிறோம்
கர்த்தாவே எழுந்தருளும்
துதிக்கிறோம் துதிக்கிறோம்
ஒன்றாக கூடித் துதிக்கிறோம் (2) - அல்லேலூயா
1. உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்
அங்கே வாசம் செய்வீர் (2) --- துதிக்கிறோம்
2. உம்மைப்போல் ஒரு தெய்வமில்லை
சர்வ சிருஷ்டிகரே (2) --- துதிக்கிறோம்
3. துதியும் கனமும் மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம் (2) --- துதிக்கிறோம்
தொடும் என் கண்களையே
1. தொடும் என் கண்களையே
உம்மை நான் காண வேண்டுமே
இயேசுவே உம்மையே நான்
காண வேண்டுமே
தொடும் என் காதினையே
உம் குரல் கேட்க வேண்டுமே
இயேசுவே உம் குரலைக்
கேட்க வேண்டுமே
தொடும் என் ஆண்டவரே
தொடும் என் வாழ்வினையே
இயேசுவே உம்மை போல்
என்னை மாற்றுமே
2. தொடும் என் நாவினையே
உம் புகழ் பாட வேண்டுமே
இயேசுவே உம் புகழைப்
பாட வேண்டுமே
தொடும் என் ஆன்மாவை
என் பாவம் போக்க வேண்டுமே
இயேசுவே என் பாவம்
போக்க வேண்டுமே
தொடும் என் ஆண்டவரே
தொடும் என் வாழ்வினையே
இயேசுவே உம்மை போல்
என்னை மாற்றுமே
3. தொடும் என் மனதினையே
மனப் புண்கள் ஆற வேண்டுமே
இயேசுவே மனப்புண்கள்
ஆற வேண்டுமே
தொடும் என் உடலினையே
உடல் நோய்கள் தீர வேண்டுமே
இயேசுவே உடல் நோய்கள்
தீர வேண்டுமே
தொடும் என் ஆண்டவரே
தொடும் என் வாழ்வினையே
இயேசுவே உம்மை போல்
என்னை மாற்றுமே
துதியுங்கள் நம் தேவனை
துதியுங்கள் நம் தேவனை
போற்றுங்கள் நம் இராஜனை
வாழ்த்துங்கள் நம் கர்த்தனை
போற்றுவோம் வாழ்த்துவோம்
இன்றும் என்றென்றுமாய்
ஆஆஆ அல்லேலூயா ஓஓஓ ஓசன்னா (4)
1. அதிசயம் செய்யும் தேவன் பெரியவர்
நாம் ஆராதிக்கும் தேவன் என்றும் சிறந்தவர்
நமக்காய் யாவும் செய்து முடித்தார்
நன்றியோடு ஆராதிப்போம்
2. நம் பாவம் போக்கும் ஜீவ தேவன் நல்லவர்
நம் பாவம் போக்கும் வல்ல தேவன் சிறந்தவர்
கண்னீர் கவலை வியாதி யாவும் மாற்றுவார்
கரங்களை தட்டி ஆர்ப்பரிப்போம்
3. நமக்காய் இரத்தம் சிந்தி மரித்தார்
மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்
நேற்றும் இன்றும் மாறிடா நம் இயேசுவை
கைகள் உயர்த்தி ஆராதிப்போம்
தேவனுக்கே மகிமை
தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை
ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க
1. உன்னதத்தில் தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும் - இந்தப்
பூமியிலே சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும் - ஐயா
2. செவிகளை நீர் திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம் - இந்தப்
புவிதனிலே உம் விருப்பம்
பூரணமாகட்டுமே - ஐயா
3. எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே - எங்கள்
ஒளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே - ஐயா
4. தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும் - இன்று
பாடுகிற யாவருமே
பரிசுத்தம் ஆகட்டுமே - ஐயா
5. குறை நீக்கும் வல்லவரே
கோடி ஸ்தோத்திரமே - பாவக்
கறை போக்கும் கர்த்தாவே
கல்வாரி நாயகனே - ஐயா
தேவன் நமக்கு அடைக்கலம் பெலனும் ஆனவரே
பல்லவி
தேவன் நமக்கு அடைக்கலம்
பெலனும் ஆனவரே
ஆபத்து காலங்களில்
அனுகூலமானவரே
சரணங்கள்
1. பூமி நிலைமாறினாலும்
மலைகள் சாய்ந்து போனாலும்
பர்வதம் அதிர்ந்து போனாலும்
நாம் பயப்படவே மாட்டோம்
2. கர்த்தர் சேனை நம் நடுவே
உயர்ந்த தேவன் நமதருகே
சாத்தான் எதிர்த்து வந்தாலும்
நாம் பயப்படவே மாட்டோம்
3. பூமி எங்கும் உயர்ந்திருப்பார்
பரத்தில் எங்கும் வீற்றிருப்பார்
அமர்ந்து இருந்து அறியுங்கள்
நம் தேவன் அவரே என்று
நான் உம்மை மறந்தாலும்
பல்லவி
நான் உம்மை மறந்தாலும் - நீர்
என்னை மறப்பதில்லை
என் நேசர் இயேசுவே நீர்
எனக்கு போதுமே
சரணங்கள்
1. தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லை
தந்தை வெறுத்தாலும் நீர் என்னை விடுவதில்லை
உம் உள்ளங்கையிலே என்னை வரைந்து வைத்தீரே
உம்மை என்றுமே நான் பாடி போற்றுவேன் --- நான்
2. பாவ சேற்றினில் வீழ்ந்து கிடந்தேனே
தூக்கி எடுத்து உம் மார்பில் அணைத்தீரே
வேத வசனமே என் பாதைக்கு தீபமே
முடிவு பரியந்தம் வழி நடத்துமே --- நான்
3. உலகம் வெறுக்கலாம் உதறித் தள்ளலாம்
உன்னதர் நிழலிலே நான் சாய்ந்து உறங்குவேன்
உந்தன் கிருபையே எனக்கு போதுமே
என்னை என்றுமே நடத்திச் செல்லவே --- நான்
தேவ பிரசன்னமே
தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே (2)
தேவனின் மகிமை நம்மை எல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே (2) --- தேவ பிரசன்னமே
1. தேவனின் நல்ல தூதர்கள்
நம்மை சுற்றிலும் இங்கு நிற்கிறார் (2) --- தேவனின்
2. தேவனின் தூய அக்கினி
இங்கு நமக்குள்ளே இறங்கி வந்திடுதே (2) --- தேவனின்
3. வானத்தின் அபிஷேகமே
இன்று நமக்குள்ளே நிரம்பி வழியுதே (2) --- தேவனின்
தம் கிருபை பெரிதல்லோ
தம் கிருபை பெரிதல்லோ
எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை கிருபை தாருமே
1. தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை
வாழ்நாளெல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்ய கிருபை தாருமே
2. நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை
நீசன் என் பாவம் நீங்கினதே
நித்திய ஜீவன் பெற்றுக் கொண்டேன்
காத்துக் கொள்ள கிருபை தாருமே
3. தினம் அதிகாலையில் தேடும் புது கிருபை
மனம் தளர்ந்த நேரத்திலும்
பெலவீன சரீரத்திலும்
போதுமே உம் கிருபை தாருமே
4. மாபரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை
மூடும் திரை கிழிந்திடவே
தைரியமாய் சகாயம் பெற
தேடி வந்தேன் கிருபை தாருமே
5. ஒன்றை ஒன்று சந்திக்கும் சத்தியமும் கிருபை
என்றும் மறவேன் வாக்குத்தத்தம்
நீதியுமே சமாதானமே
நிலை நிற்கும் கிருபை தாருமே
6. ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை
ஆத்தும பாரம் கண்ணீரோடே
சோர்வின்றி நானும் வேண்டிடவே
ஜெபவரம் கிருபை தாருமே
தம் கிருபை பெரிதல்லோ
தம் கிருபை பெரிதல்லோ
எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை கிருபை தாருமே
1. தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை
வாழ்நாளெல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்ய கிருபை தாருமே
2. நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை
நீசன் என் பாவம் நீங்கினதே
நித்திய ஜீவன் பெற்றுக் கொண்டேன்
காத்துக் கொள்ள கிருபை தாருமே
3. தினம் அதிகாலையில் தேடும் புது கிருபை
மனம் தளர்ந்த நேரத்திலும்
பெலவீன சரீரத்திலும்
போதுமே உம் கிருபை தாருமே
4. மாபரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை
மூடும் திரை கிழிந்திடவே
தைரியமாய் சகாயம் பெற
தேடி வந்தேன் கிருபை தாருமே
5. ஒன்றை ஒன்று சந்திக்கும் சத்தியமும் கிருபை
என்றும் மறவேன் வாக்குத்தத்தம்
நீதியுமே சமாதானமே
நிலை நிற்கும் கிருபை தாருமே
6. ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை
ஆத்தும பாரம் கண்ணீரோடே
சோர்வின்றி நானும் வேண்டிடவே
ஜெபவரம் கிருபை தாருமே
சொந்தம் என்று சொல்லிக் கொள்ள
சொந்தம் என்று சொல்லிக் கொள்ள
உம்மை விட யாரும் இல்ல
சொத்து என்று அள்ளிக் கொள்ள
உம்மை விட ஏதும் இல்ல
இயேசுவே இயேசுவே எல்லாம் இயேசுவே
1. உம் தழும்புகளால் நான் சுகமானேன்
உம் வார்த்தையினால் நான் பெலனானேன் ...
நான் பெலனானேன், நான் பெலனானேன்
2. உம் கிருபையினால் நான் பிழைத்துக் கொண்டேன்
உம் பாசத்தினால் நான் திகைத்துப் போனேன் ...
நான் திகைத்துப் போனேன், நான் திகைத்துப் போனேன்
3. உம் ஆவியினால் நான் பிறந்து விட்டேன்
உம் ஊழியத்துக்காய் நான் உயிர் வாழ்வேன் ...
நான் உயிர் வாழ்வேன், நான் உயிர் வாழ்வேன
சமாதானம் நல்கும் நாமம் இயேசு நாமமே
சமாதானம் நல்கும் நாமம் இயேசு நாமமே
மனச்சாந்தி தரும் இனிய நாமம் இயேசு நாமமே
இயேசு நாமமே, இயேசு நாமமே
கிறிஸ்தேசு நாமமே (2)
1. அன்னை தந்தை சொந்தம் யாவும் இயேசு நாமமே
தன்னை தந்த இன்ப நாமம் இயேசு நாமமே
2. பாவமற கழுவும் நாமம் இயேசு நாமமே
உயர் பக்திதனை வளர்க்கும் நாமம் இயேசு நாமமே
3. பாவ இருள் போக்கும் நாமம் இயேசு நாமமே
ஜீவ ஒளி வீசும் நாமம் இயேசு நாமமே
4. பொன் வெள்ளி புகழ் பொருளும் இயேசு நாமமே
என் உள்ளில் வாழும் ஏசு நாமம் இயேசு நாமமே
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானும் நீரே
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானும் நீரே
சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம்
என்றென்றும் பணிந்து தொழுவோம்
ஆஹா ஹா அல்லேலூயா (8) ஆமென்.
1. வானம் பூமி ஒழிந்து போனாலும் உம்
வார்த்தைகள் என்றும் மாறாதே
உலகம் அழிந்து மறைந்து போம்
விசுவாசி என்றென்றும் நிலைப்பான் --- ஆஹா ஹா
2. சாத்தான் உன்னை எதிர்த்து போதும்
ஜெயக் கிறிஸ்து உன்னோடே உண்டே
தோல்வி என்றும் உனக்கில்லையே
துதிகானம் தொனித்து மகிழ்வாய் --- ஆஹா ஹா
3. எந்தன் மீட்பருமட் ஜீவனும் நீரே
என்னை காக்கும் கர்த்தரும் நீரே
என்னை உமக்கு என்றும் அர்ப்பணித்தேன்
என் வாழ்வில் ஜோதியும் நீரே --- ஆஹா ஹா
கிருபையால் நிலை நிற்கின்றோம்
கிருபையால், நிலை நிற்கின்றோம்
உம் கிருபையால், நிலை நிற்கின்றோம்
கிருபை - (7) --- கிருபையால்
1. பெயர் சொல்லி அழைத்தது, உங்க கிருபை
பெரியவனாக்கியதும், உங்க கிருபை
கிருபை - (7) --- கிருபையால்
2. நீதிமானாய் மாற்றியது, உங்க கிருபை
நித்தியத்தில் சேர்ப்பது, உங்க கிருபை
கிருபை - (7) --- கிருபையால்
3. கட்டுகளை நீக்கினது, உங்க கிருபை
காயங்களை கட்டியதும், உங்க கிருபை
கிருபை - (7) --- கிருபையால்
4. வல்லமையை அளித்தது, உங்க கிருபை
வரங்களை கொடுத்தது, உங்க கிருபை
கிருபை - (7) --- கிருபையால்
5. கிருபையை, கொண்டாடுகிறோம்
தேவ கிருபையை, கொண்டாடுகிறோம்
கிருபை - (7) --- கிருபையால்
Monday, 5 May 2014
கடும் புயலிலே என்னைக் காத்தவரே
1. கடும் புயலிலே என்னைக் காத்தவரே
கண்ணின் மணிபோல காப்பவரே
தினம்தோறும் உம் கிருபையினால்
வழி நடத்திடுமே
என் அன்பு நேசரே என் ஆருயிர் நண்பனே
வாழ்த்துவேன் வணங்குவேன் உம்மையே
என் வாழ்நாளெல்லாம் உமக்காய் ஜீவிப்பேன்
என் உயிருள்ள நாள்வரை உம்மைப் போற்றிடுவேன்
2. இந்த நாளின் ஒவ்வொரு செயலிலும்
உம் ஞானத்தால் என்னை நடத்துமே
நான் நடக்கும் வழிதனை காண்பித்து
ஆலோசனை சொல்லுமேன் --- என் அன்பு
3. பழைய நினைவுகள் கசந்த நிகழ்ச்சிகள்
துயரமான பல தோல்விகள்
என்னை வாட்டுகின்ற வேளையில்
உம் சமூகத்தை நான் சாருவேன் --- என் அன்பு
4. உடைந்த உறவுகள் மனதின் கசப்புகள்
என்னை நொறுக்கும் இதயத்தின் ஏக்கங்கள்
இருளாய் என்னை சூழ்கையில்
உம் பிரசன்னம் தான் என் அடைக்கலம் --- என் அன்பு
கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2)
1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு என்றும்
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்
கும்பிடுவோரை குணமாக்கும் வேதம்
2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம் திருமுகம் காண
நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்
என்னை காணுவோர் உம்மை காணட்டும்
3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா
நான் சிறுகவும் நீர் பெருகவும்
தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும்
கர்த்தர் தாமே நம் முன்னே போவார்
கர்த்தர் தாமே நம் முன்னே போவார்
கர்த்தர் தாமே நம் பின் வந்து காப்பார் - (2)
நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2)
1. உதவிடும் கன்மலை இயேசுவை நோக்குவோம்
விலகிடார் கைவிடார் தாங்குவார் உறங்கிடார் - (2)
நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2) --- கர்த்தர்
2. உயிர் தரும் ஆயனே சுகம் தரும் நேயனே
கனிவுடன் நடத்துவார் பரிவுடன் தேற்றுவார் - (2)
நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2) --- கர்த்தர்
3. உலகுக்கு வெளிச்சம் நான் பூமிக்கு உப்பு நான்
மரிக்கும் வித்து நான் பரமனின் சொத்து நான் - (2)
நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை -
நீதி கொன்ற நீதிபதி
லூக்கா 23 : 20-25
“இயேசுவையோ, அவர்கள் இஷ்டத்துக்கு ஒப்புக் கொடுத்தான்!” - லூக்கா 23 : 25